வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றின் நன்மைகள்..!
நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதினால் வயிறு கோளாறுகளை சரிசெய்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது, மேலும் மலச்சிக்கலையும் சரிசெய்கிறது.
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மிய கொண்டது. பல், நகம், எலும்பு ஆகியவைகளுக்கு தேவையான கால்சியம் சத்தை உறிஞ்ச உதவுகிறது.
சிறுநீர் பாதையின் நோய் தொற்றுக்களை குறைக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழுக்க உதவியாக இருக்கிறது. உடம்பில் இருக்கும் அதிகமான உப்பு, கற்கள், நீர், யூரிக் அமிலம் ஆகியவற்றை வெளியேற்றுகிறது.
நெல்லிக்காய் உடம்பில் ஏற்ப்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. இதனால் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. ரத்த அணுக்களை அதிகரிக்கிறது.
நெல்லி சாறு உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவியாக இருக்கிறது.
நெல்லிக்காய் சாறு தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, சரும ஆற்றலுக்கும் நன்மை அளிக்கக்கூடியது.