உங்க உடல் ஆரோக்கியமா இருக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும்…!!
நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் நம் சமையலறையில் இருக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்றே . அதில் நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் வெந்தயம்.
இந்த வெந்தயம் பல உடல் பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் . மெத்தி என்று அழைக்கப்படும் வெந்தய விதைகளில் அற்புதமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.
வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த வெந்தயத்தை ஊற வைத்து, அதை முளைக்கட்ட வைத்து உட்கொண்டால், பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் இது பல பேருக்கு தெரிவதில்லை .அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
அதற்கு வெந்தயத்தை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் அதை ஒரு ஈரத்துணியில் போட்டு கட்டி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும். அவ்வப்போது அதில் நீரைத் தெளிக்க வேண்டும். இப்படி செய்தால், வெந்தயம் முளைக்கட்டிவிடும்.
1. சர்க்கரை நோய் கட்டுப்படும் முளைக்கட்டிய வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்தத்தில் க்ளுக்கோஸை மெதுவாக வெளியிடச் செய்யும். இதன் விளைவாக இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் . அதன் பின் அந்த முளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு கையளவு எடுத்து, அதில் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.
2. எடை இழப்புக்கு உதவி புரியும் வெந்தயத்தை முளைக்கட்ட வைக்கும் போது, அந்த விதைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும். அதுவும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு உதவி புரிகிறது.
3. நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும் முளைக்கட்டிய வெந்தயத்தில் பீனால்கள், ப்ளேவோனாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் . ஆகவே முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடும் போது உடலில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை சிறப்பான அளவில் இருக்கும். இதன் விளைவாக உடலில் சிறு கிருமிகள் நுழைந்தாலும், அது திறம்பட அழிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
4. இதய ஆரோக்கியம் மேம்படும் முளைக்கட்டிய வெந்தயத்தை பொட்டாசியம் அதிகளவில் உள்ளன. இந்த பொட்டாசியம் உடலில் சோடியத்தை கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைப்பதோடு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் தேங்குவதை கட்டுப்படுத்துகிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும் .
5. செரிமானம் மேம்படும் வெந்தயத்தை நீரில் ஊற வைக்கும் போது, அது மென்மையாகவும் மிருதுவாகவும் ஆகிறது. இதை சாப்பிடும் போது, அது எளிதாகவும், வேகமாகவும் ஜீரணமாகும் மேலும் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொள்ளும் போது, அது கணையத்தில் பீட்டா செல்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. அதோடு அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுத்து, செரிமான செயல்முறையை சீராக வைத்துக் கொள்லும் தன்மை உடையது.
-நிரோஷா மணிகண்டன்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..