ஐஸ் பிரியாணியில் இவ்வளோ நன்மைகளா..?
கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பார்த்தல் அவர்களின் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன என்று கேட்டால் சட்டென்று பழைய சோறு, கம்பங்கூழு , களி தான் என்று என்று சொல்வார்கள் . நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது பழைய சாதம் என்பது மறுக்க முடியாத உண்மை.
பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் ( American Nutirition Association ) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது.
பலவித உணவுகள் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், பழைய சாதத்திலிருந்து கிடைக்கும் நன்மைகள் ஏராளம் .வேறு வேறு உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் வீட்டுக்கு வந்து ஒரு பிடி சோறு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்று நினைக்கும் பலர் இருக்க தான் செய்கிறார்கள் .
பழைய சாதம் குறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்க்கலாம் . சூடாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். சிலருக்கு முதல் நாள் வடித்த சாதம் அல்லது காலையில் வடித்த சாதத்தில், ஐஸ் பிரியாணி என்று கூறப்படும் பழைய சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு வலுசேர்க்கும் என்று கால காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. பழைய சாதம், அப்போது சமைக்கப்பட்ட சூடான சாதத்தை விட பல விதங்களில் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
சமைக்கப்பட்ட அரிசியில் இருக்கும் ஸ்டார்ச், குளிரவைக்கப்பட்டவுடன், அதன் தன்மை மாறிவிடுகிறது. அதாவது, உணவில் இருக்கும் ஸ்டார்ச் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, எளிதாக செரிமானம் ஆகக்கூடிய ஸ்டார்ச்சில் இருந்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் அதாவது குறைவான கிளைகேமிக் இன்டக்ஸ் கொண்ட, எளிதில் செரிமானம் ஆகாத ஸ்டார்ச் ஆக மாறுகிறது. இது அரிசியில் மட்டுமல்லாமல், அதிக ஸ்டார்ச் உணவுகள் எல்லாவற்றிலும் இப்படி மாறும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..?
ஸ்டார்ச் அதிகம் இருக்கும் அரிசி சாதம், உருளைகிழங்கு உள்ளிட்டவை எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. ஆனால் இந்த ஸ்டார்ச் குளிரூட்டப்பட்ட பிறகு இந்த உணவுகள் ரெஸிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானம் ஆவதற்கு தாமதமாகும்.
இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது. அதுமட்டுமல்லாமல் பழைய சாதத்தில் உடலுக்கு தேவையான பாக்டீரியா மற்றும் புரோபயாட்டிக் ஆகியவை உற்பத்தியாகும்.
இது செரிமான கோளாறுகளை சரிசெய்வதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதனால் நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் இந்த பழையச் சோறு சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இது நமது உடலின் ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் அதேசமயம், குடல் ஆரோக்கியமும் காக்கப்படுகிறதாம்.
பழைய சோறு தண்ணீரில் உள்ள சத்துகளும் பலன்களும் உண்மையை சொல்லப்போனால், வடித்த சாதத்தை விட, இந்த பழைய சோறு தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம்.
உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பாக்டீரியாக்கள்: இரவே சாதத்தில், தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்..
இதை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடல் உஷ்ணம் குறையும்… இது மிகச்சிறந்த மலமிளக்கி.. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறும்.. சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. எனர்ஜி நிறைந்த பானமாகவும், திகழ்கிறது.
இன்றைய கால கட்டத்தில் வளரும் குழந்தைகள் கடையில் விற்கும் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஆனால் அது உடல் நலத்திற்கு கேடு விலை விக்கும் .பெற்றோர்கள் தான் பிள்ளைகளிடம் இந்த உணவு முறைகளை பற்றி சொல்லி புரிய வைத்து சாப்பிட வைக்க வேண்டும் .
-நிரோஷா மணிகண்டன்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..