இந்த எண்ணெய் பற்றி தெரியாம பயன் படுத்தாதீங்க..!!
தினமும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் குடித்தால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றியும் விளக்கெண்ணெய் பற்றியும் அவை தரக்கூடிய நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்.., அதாவது செரிமானம், எடை இழப்பு, தொப்பையை குறைய, கொழுப்பு கட்டிகள் கரைப்பது போன்று பல நன்மைகள் கொடுக்கும்.
பழங்காலம் முதலாக நம் முன்னோர்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காகவும், ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் கை வைத்தியங்களில் விளக்கெண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் . விளக்கெண்ணெயைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது காண்போம்.
விளக்கெண்ணெய் எண்ணெய்களுள் சற்று அடர்த்தியான மற்றும் நறுமணமற்ற எண்ணெய் ஆகும். இந்த விளக்கெண்ணெயை ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவார்கள் .
குறிப்பாக இந்த ஆமணக்கு செடியில் இருந்து எடுக்கப்படும் விதைகளில் இருந்து இந்த விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்த எண்ணெய் விளக்குகளுக்கான எரிபொருளாக மட்டுமின்றி, அழகு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
முக்கியமாக கிளியோபாட்ராவின் அழகான தோல் மற்றும் கண்களுக்கு இந்த எண்ணெய் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்போது இந்த விளக்கெண்ணெயினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொஞ்சம் விரிவாகவே படிக்கலாம் வாங்க.
மலச்சிக்கல் பிரச்சனை இந்த காலத்துல மட்டும் இல்லங்க அந்த காலத்துல இருந்தே மலசிக்கல் பிரச்சனை இருக்கு, இந்த பிரச்சனைக்கான தீர்வு விளக்கெண்ணெய் என்று அந்த காலத்திலேயே சொல்லி இருக்காங்க அதாவது ஒரு மலமிளக்கி பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும். விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிலே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே உடலில் சரியான பலனைப் பெற முடியும். அதோடு இந்த எண்ணெயை நீங்கள் அதிகம் (Regular Use ) செய்யாமல் இருப்பதே நல்லது.
.
சருமம் :
விளக்கெண்ணெய் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனால் தான் சில அழகு சாதனப் பொருட்களில் கூட விளக்கெண்ணெய் பயன்படுத்தி உறுப்பத்தி செய்கிறார்கள்.. இருப்பினும் இந்த எண்ணெய்யின் தன்மை அதிகமாக இருப்பதால், மற்ற எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால் Side Effect வராது.
ஆனால் சில சமயங்களில் இது சருமத்தில் எரிச்சலை கொடுக்கும் எனவே எண்ணெய் சருமம் உடையவர்கள் இதை ட்ரை பண்ண வேண்டாம்.
விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் வறண்ட ஸ்கால்ப், முடியின் வளர்ச்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த பலன் கொடுக்கும். குறிப்பாக கூந்தல் உதிர்வு பிரச்சனை இருக்கும் ஆண் அல்லது பெண் வாரத்தில் இரண்டு முறையாவது விளக்கெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
குடலை சுத்தம் செய்வதற்காக நம் முன்னோர்கள் விளக்கெண்ணெய் தான் பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.. ஏனெனில் நம் குடலில் சேரபடும் அழுக்குகள் வெளியேற்ற இந்த விளக்கெண்ணெய் தான் பயன்படுத்தியுள்ளனர்.., இன்று பலரும் இதே முறையை தான் பின் பற்றுகிறார்கள். மேலும் வயிற்று பிடிப்புகள் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.
இந்த ஆமணக்கு எண்ணெய் இரைப்பை குடல் அசௌகரியம் மற்றும் வயிற்று வலியில் இருந்து விடுபட இவை பெரிதும் உதவுகிறது. அதே சமயம் இந்த எண்ணெய் நாம் அதிகம் எடுத்துக்கொண்டால், அதன் பின் விளைவு இப்படி தான் இருக்கும்..
அதாவது குமட்டல், அடிவயிற்று பிடிப்பு, வாந்தி, வயிற்று உப்புசம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற விளைவுகள் ஏற்பட்டால் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வதை கை விட வேண்டும்..
இந்த எண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை ஒரு சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும்.., எனவே இவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்களின் உடல் பலம் பற்றி தெரிந்து கொண்டு பயன் படுத்துங்கள்..
– நிரோஷா மணிகண்டன்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..