சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை..!! இன்னும் அதன் தரம் குறையவில்லை..!
நன்கு காய்ந்த இஞ்சியை தான் “சுக்கு” என்று அழைக்கிறோம்.. இது நீண்ட நாட்களுக்கு கெடாமலும் இருக்கும். இதை சமையலில் பயன் படுத்துவதை விட அதிகம் மருத்துவத்தில் தான் பயன்படுத்துகிறார்கள்.
அதன் சில மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்..
* சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கை, கால் மற்றும் மூட்டு என வலியுள்ள இடங்களில் பூசினால் கை, கால் மற்றும் மூட்டு வலி குணமாகும்.
* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி மற்றும் சித்தரத்தை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சுண்ட காய்ச்ச வேண்டும். கசாயம் பதத்திற்கு வந்த பின் வடிகட்டி குடித்தால், மூன்றே நாட்களில் காய்ச்சல் மற்றும் சளி குணமாகி விடும்.
* வாந்தி குமட்டல் நிற்க சுக்கு மற்றும் துளசி சிறிதளவு சேர்த்து சாப்பிட்டால் நின்று விடும்.
* நன்கு காய்ச்சிய பாலில் சிறிதளவு சுக்கு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீரக நோய் குணமாகிவிடும்.
* சுக்கு, மிளகு, பூண்டு, மற்றும் வேப்பிலை சேர்த்து தண்ணீரில் கசாயம் பதத்திற்கு நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் மூன்று வேளை, என இரண்டு நாட்கள் குடித்தால் விஷக் காய்ச்சல் நீங்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி