மதிமுக இன்று 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த கட்சியை உருவாக்கிய வைகோ என்ற மாமனிதருக்கு பார்லிமென்ட் டைகர் என்றே செல்லப் பெயர் உண்டு. ஏனென்றால், நாடாளுமன்றத்தில் வைகோ புலி உறுமுவது போல கருத்துக்களை எடுத்து வைக்கும் தனித்திறன் பெற்றவர். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் முகமாக இருந்தவர். ஈழவிடுதலையே தனது லட்சியமாகக் கொண்டவர். ஈழத்தின் மீது கொண்ட பற்றினால், அங்கு போய் வந்தவர். இதன், காரணமாகவே அவர் மதிமுக என்ற கட்சியையும் தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் வரலாறு.
பேரறிஞர் அண்ணாவுக்கு அடுத்து மாநில சுயாட்சிக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்களில் வைகோ முதன்மையானவர் என்றால் மிகையல்.ல அண்ணாவுக்கு நான் இருந்ததுபோல, தனக்கு தன் தம்பி கோபால்சாமி என்று திமுக தலைவர் கருணாநிதியால் புகழப்பட்டவர்.
கடந்த 1978ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, மத்திய அரசு தனக்கு இந்தியில் அனுப்பிய கடிதங்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் முன்னிலையில் கிழித்து எறிந்தார் வைகோ. அப்போது, இந்த கடிதங்கள் போலவே உங்கள் இந்தி எதிர்ப்பு முயற்சியையும் தமிழக மக்கள் கிழித்து எறிவார்கள் என்று முழங்கியதை பார்த்து அவையே அதிர்ந்து போனது.
1984ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை கூட்டம் ஒன்றில் ஈழப்பிரச்சனையை வைகோ கொண்டு வந்தார். அப்போது இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச்சென்ற விமானத்திற்கு திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது குறித்து பிரதமர் ராஜிவ் காந்தியிடம் கேள்வி கேட்டார். அதற்கு . ராஜிவ்காந்தி, ஆயுதங்களில் இலங்கை தமிழர் என்று எழுதப்படிருக்கவில்லை என்று அலட்சியமாக பதில் சொன்னார். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற வைகோ, உங்கள் தாயார் இந்திரா காந்தியை துளைத்த குண்டுகளிலும்கூட இந்திராகாந்தி எனப்பெயர் எழுதப்படவில்லை என்று அதிரடியாக பதிலடி கொடுத்தார். வைகோவின் இந்த வாதத்தால் ராஜிவ் காந்தி தலை தொங்கியே போனது.
வைகோவை பற்றி அறியாத இன்னொரு விஷயம், தமிழக அரசியலையும் மத்திய அரசியலையும் அற்புதமாக பிரித்து பார்க்கக் கூடிய அரசியவாதி என்பதுதான். கடந்த 1985ம் ஆண்டு ஈழப்பிரச்னை உச்சியில் இருந்த போது, ஜெயவர்த்தனா டெல்லி வருகிறார். டெல்லியில் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். அப்போது, இலங்கையில் நடக்கும் குழப்பங்களுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர்தான் காரணமா? என்கிற கேள்வியை செய்தியாளர்கள் முன் வைக்கின்றனர். ஜெயவர்த்தனாவும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்துவதே எம்.ஜி.ஆர்தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அடுத்த நாள் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ராஜீவ் காந்தி வருகிறார். ஜீரோ ஹவரிலல் சட்டென்று எழுந்த வைகோ, நேற்று எம்.ஜி. ஆரை ஜெயவர்த்தனா குற்றம் சாட்டிய போது, நீங்கள் பல்லை காட்டிக் கொண்டிருந்தீர்களே… இது சரியா என்று காட்டமாக கேட்டார். அப்போது, அவையில் இருந்த காங்கிரசார், என்ன திடீர்னு வைகோவுக்கு எம்.ஜி.ஆர் மீது காதல் வந்து விட்டது என்று கேலி பேசினர். இந்த தருணத்தில் அவர்களிடத்தில் உறுமிய கைவோ, எங்கள் மாநில அரசியலில் நாங்கள் என்னவும் எப்படியும் பேசிக் கொள்வோம். அது எங்கள் பிரச்னை. ஆனால், ஒரு வெளிநாட்டுக்காரர் எங்கள் முதல் அமைச்சரை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் முதலில் எனக்கு முதலமைச்சர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று அதிரடியாக பதிலடி கொடுத்தார். உண்மையிலேயே வைகோவின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தில் புலியின் கர்ஜணையாகவே அமைந்தது என்றால் மிகையல்ல.
தலைவர்கள் மட்டுமல்ல சாதாரண ஊழியர்களையும் வைகோ கவனிப்பார் என்பதற்கும் ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். ஒரு முறை வைகோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இரவில் டிக்கெட் செக்கர் உறங்காமல் நின்று கொண்டே வந்துள்ளார். இதை பார்த்த வைகோ, ஏன் நின்று கொண்டே வருகிறீர்கள், உங்கள் இருக்கை என்ன ஆச்சு? என்று கேட்டுள்ளார். அப்போது, டிக்கெட் செக்கர் தங்களுக்கு இருக்கை தரமாட்டார்கள். நாங்கள் நின்று கொண்டேதான் வர வேண்டுமென்று பதில் அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வைகோ, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்தே, டிக்கெட் செக்கர்களுக்கு ரயிலில் இருக்கை வழங்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தனர். இவர்களை விடுவிக்க வைகோ எடுத்த முயற்சி அளப்பறியது. தனது கட்சி பணம் 75 லட்சத்தை செலவழித்து வழக்குகளில் வாதாடி அவர்களை வெளியே கொண்டு வந்தார் வைகோ. இந்த விஷயம் பல தமிழ் மக்கள் அறிந்திராதது. பல வழக்குகளில் வைகோவே வழக்கறிஞராக வாதாடி வெற்றி பெற்று விடுவார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பகுத்தறிவு பின்புலத்தில் இருந்து வந்த வைகோ கடவுளுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ராமர் கோவில் சிலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பக்கூடாது என வைகோ தடுத்த கதையும் நடந்தது உண்டு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை முதலிலேயே கண்டறிந்து கடைசி வரை அந்த ஆலைக்கு எதிராக போராடியவர். ஆலை மூடப்பட்ட பின்னரே வைகோ ஓய்ந்தார்.
தமிழகத்தில் மோடி அரசு கொண்டு வந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டவர். முல்லை பெரியாறு அணை குறித்து கேரள மக்களிடையே சென்று விழிப்புணர்வில் ஏற்படுத்தும் அளவுக்கு தைரியமும் கொண்டவர். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தவர்.காவிரி நதி நீருக்காக கடைசி வரை போராடியவர், நாடாமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க முயற்சி எடுத்தவர், நெய்வெலி என்.எல்.சி யை தனியார் வசம் போய் விடாமல் தடுத்தவர் என வைகோவின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலம்.
அத்தகைய மாமனிதர் தோற்றுவித்த மதிமுக இன்று 32வது பிறந்த நாளை கண்டுள்ளது. மதிமுக 100 ஆண்டுகள் கண்டு. தமிழ் மக்களுக்கு தளராமல் சேவை செய்ய வேண்டுமென மதிமுகம் சேனல் இந்த தருணத்தில் மனதார வாழ்த்துகிறது.