இளநரை எற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதிலும் 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. மரபியல் காரணம் தொடங்கி தலைமுடி பராமரிப்பின்மை, வாழ்க்கை முறை என பல்வேறு காரணிகள் இருக்கலாம். அவற்றில் முக்கியமான காரணம் உணவுமுறை. உணவுமுறையாலே கூட இந்த இளநரை பிரச்சினையைத் தடுக்க முடியும். Prevent Premature Gray Hair
அப்படி இளநரையை தடுக்க சித்த மருத்துவர்கள் சொல்லும் 5 உணவுகள் பற்றி இங்கு தெறிந்துகொள்வேம். Prevent Premature Gray Hair
வயதாகும்போது தலைமுடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் அது இளம் வயதிலேயே வருவது தான் பிரச்சினைகுறிய விஷயம். நாற்பது வயது நபர்களுக்கு ஒன்றிரண்டு என்று நரைக்கத் தொடங்கலாம். ஆனால் 30 வயதுகளில் இளநரை வருவது கட்டுப்படுத்தப்பட வேண்டிய விஷயம். அதற்கு சித்த மருத்துவர்கள் சொல்லும் இந்த ஐந்து உணவு பொருட்கள் உங்களுக்குக் கைகொடுக்கலாம்.
இளம் வயதிலேயே நரைமுடி வருவதற்கு மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி மூன்று வகையான காரணங்கள் கூறப்படுகின்றன. Prevent Premature Gray Hair
1. தலைமுடிக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாத உணவுமுறை.
2. அதிகமாக சூரிய ஒளியில் முடியை காட்டுவது (புறஊதா கதிர்களின் தாக்கம்),
3. மன அழுத்தம்,
இந்த மூன்றும் காரனங்களும் தலைமுயை வேகமாக நரைக்கச்செய்கிறது.
இளநரையை போக்கும் 5 இயற்கை உணவுகள்
1.நெல்லிக்காய் Prevent Premature Gray Hair
தலைமுடிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நம்பமுடியாத பல நன்மைகளை வழங்கக்கூடியது நெல்லிக்காய். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. அவை முடியின் வேர்ளுக்குள் சென்று இயற்கையாகவே நிறமியை மாற்றுகிறது. இதனால் வேகமாக இளநரை வருவதைத் தடுக்கவும் தவிர்க்கவும் முடியும்.
2. கருஞ்சீரகம் Prevent Premature Gray Hair
கலோஞ்சி, black cumin, black seed என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த கருஞ்சீரகம் தலைமுடிக்கு மிகச்சிறந்த பலன்களைத் தரும். இந்த கருஞ்சீரக விதைகள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இயற்கையாகவே முடியின் வளர்ச்சியை வேகமாக வளர தூண்டும். இளநரை வருவதைத் தடுக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை முறையான ஹேர்பேக்காக பயன்படுத்தி வர சிறந்த பலன்களைப் பெறலாம்.
3. கறிவேப்பிலை
தலைமுடியை கருகருவென்று மாற்றவும் இளநரை வராமல் தடுக்கவும் கறிவேப்பிலை நம் வீட்டில் இருக்கும் மிகச்சிறந்த பொக்கிஷம். அதன் அருமை தெரியாமல் நாம் தட்டில் இருந்து தூக்கி வீசிவிடுகிறோம். கறிவேப்பிலை முடியின் வேர்ளுக்குள் சென்று முடியின் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. தினமும் காலையில் 10 ஃபிரஷ்ஷான கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டாலே போதும்.
4.கருப்பு எள்
கருப்பு எள் தலைமுடிக்குத் தேவையான மற்றொரு அருமருந்து. இது தலைமுடியை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மீட்கும் வேலையைச் செய்கிறது. இதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் அதிகப்படியான கால்சியம் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முன்கூட்டியே நரைமுடி உண்டாவதையும் தடுக்கிறது. தலைக்கு நீங்கள் வழக்கமாகத் தேய்க்கும் எண்ணெயுடன் சிறிதளவு எள் எண்ணெயை கலந்து அல்லது தினமும் ஒரு ஸ்பூன் வீதம் எள் எண்ணையை முடிக்கு தடவிவர முடி கருகருவென்று மாறுவதைப் கண்கூடாக பார்க்கலாம்.
5.கோதுமைப்புல்
கோதுமைப் புல் தலைமுடிக்கும் ஒரு சூப்பர் ஃபுட். கோதுமைப்புல் சாறு உச்சந்தலையை சுத்தப்படுத்தி பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்வது முதல் முடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
மேற்கண்ட பொருள்களை நேரடியாக தலைமுடிக்கு அப்ளை செய்யலாம், ஆயிலாக நாம் பயன்படுத்தலாம். அதையெல்லாம் தாண்டி இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வரும்போது அது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும். முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து நம் உடலுக்குள் இருந்தே நேரடியாகக் கிடைக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.