கொத்தமல்லி இலை புலாவ்..!
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி – 2 கப்
தேங்காய்ப்பால் – அரை கப்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று
பட்டை – சிறு துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளமாகவும் மெல்லியதாகவும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்த கொத்தமல்லி இலையுடன் சேர்த்த் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் உப்பு, கொத்தமல்லி விழுது, தயிர், தேங்காய்பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு இரண்டு கப் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
10 நிமிடம் அழித்து குக்கரை இறக்கி ஆவி போனதும் குக்கரை திறந்து கிளறி விடலாம்.
அவ்வளவுதான் கமகமணு கொத்தமல்லி புலாவ் தயார்.
