ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் நடைபெறுமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. நாளை இந்தியாவில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது. அதே வேளையில், பாகிஸ்தானில் அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டு ராணுவத்தை வெறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியுரிமை பெற்ற பாடகர் அட்னான் சமி, சமீபத்தில் அஸர்பைஜான் சென்ற போது தன்னிடத்தில் சில பாகிஸ்தான் இளைஞர்கள் பேசினார்கள். அப்போது, நீங்கள் நல்லவேளையாக பாகிஸ்தானில் இருந்து சென்று விட்டீர்கள்.பாகிஸ்தான் ராணுவத்தை நாங்கள் வெறுக்கிறோம். அவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல நாங்களும் சிட்டிசன்சிப்பை மாற்ற போகிறோம் என்று சொன்னதாக பதிவு வெளியிட்டிந்தார்.
தற்போது, பாகிஸ்தான் ராணுவத்தை அந்த நாட்டு மக்கள் வெறுப்பதை உறுதிப்படுத்துவது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் உள்ளது. இங்கு, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வழிபாட்டின் போது மதகுரு அப்துல் அஜீஸ் காசி மக்களை நோக்கி, “இந்தியாவும் பாகிஸ்தானும் போர் செய்தால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரிப்பீர்கள்?” எனக் கேட்கிறார். கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தவில்லை.
உடனே மதகுரு இமாம் பேசத்தொடங்குகிறார். இங்கிருந்து பார்க்கும்போது ஓரிரு கரங்கள் மட்டும் உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் பலர் அறிவொளி பெற்றுள்ளனர் என்பது அறியப்படுகிறது. பாகிஸ்தானின் போராட்டம் இஸ்லாத்துக்கான போராட்டமாக பார்க்காதீர்கள். அதிகாரத்துக்கானப் போர். இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக ஒடுக்குமுறை காணப்படுகிறது. இந்தியா தன் சொந்த மக்களை ஒரு போதும் கொன்றதில்லை. பாகிஸ்தான் சொந்த மக்கள் மீது குண்டு வீசுகிறது. பாகிஸ்தனில் மக்கள் காணாமல் போவது போல, இந்தியாவில் காணாமல் போகிறார்களா? லால் மஜீத்துக்கு 2007 ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் புகுந்து 154 பேரை கொன்றது. மதச்சார்பற்ற பாகிஸ்தானியர்களை இந்த அரசு அச்சுறுத்தலாக பார்க்கிறது ”என்று பேசினார்.
ஏற்கெனவே அரசுக்கு எதிராக மதகுருமார்கள் செயல்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் அரசு கருதுகிறது. இப்போது, இமாம் வெளிப்படையாக அரசை விமர்சித்திருப்பது பாகிஸ்தான் அரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.