இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்து 29 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை , 1.27 கோடி கார்களை அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு தொழிற்சாலை தமிழகத்தில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் அமைந்தது. 1996ம் ஆண்டு மே 6ம் தேதி இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தென்கொரியாவை விட்டு வெளியே அமைக்கப்பட்ட முதல் ஹூண்டாய் ஆலை என்ற பெருமையும் இதற்கு உண்டு. 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது.
இதுவரை, இந்தியாவில் 1.27 கோடி கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உலகம் முழுக்க 150 நாடுகளில் 37 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது, மகராஸ்டிர மாநிலத்திலுள்ள டெலிகான் பகுதியில் மற்றொரு ஆலையை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. 2025ம் ஆண்டு இறுதியில் இந்த தொழிற்சாலையில் இருந்தும் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.