“ரசிகர்கள் ரசனைக்கு விருந்தாக தேனிசை தென்றல் தேவா..” பாடலில் இத்தனை அர்த்தங்களா..?
அட இவரு இவ்வளவு தத்துவ பாடல்கள் பாடி இருக்குறா..? என்று ஆச்சரிய படும் அளவிற்கு மட்டுமின்றி. சிந்திக்கும் அளவிற்கும் உள்ளது இவரது பாடல்கள். 80 மற்றும் 90 களின் காலக்கட்டங்களில் இவரது பாடல்கள் எல்லாம்.
சினிமாவில் தயாரிப்பாளரிடம் காசு பெற்றுக்கொண்டு இசை அமைத்து கொடுத்த ஒருவர் காப்புரிமை கேட்டு கொண்டிருக்கும் போது கூட இவர், தன்னுடைய பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்பதே எனக்கு போதும், அதுதான் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என்று சொல்கிறார். இதை கேட்கும் போது நமக்கு என்ன தோன்றும்..? “அந்த மனசு தான் சார் கடவுள். என்று சொல்லணும் தான் தோணும்.
அப்படி அவர் இசையமைத்து எழுதிய பாடல்கள் தான் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சூரியன் என்றால் கிழக்கே மட்டும் தான் உதிக்க வேண்டுமா என்ன..? அவை மேற்கே தான் உதிக்க கூடாதா என்ன..? ஒருநாள் எங்களின் வாழ்க்கை மாற வேண்டுமென மீனவர்களுக்காக அவர் எழுதிய பாடல் தான் இவை. நடிகை அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் வரும் இந்த பாடல்..
இடர் நீங்கவே…, வந்த இருள் போகவே…
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு,
விண்ணை இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன…
சிலருக்கு உடம்பில் குறைகள் இருந்தால் அவர்களை ஊனம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையான ஊனமுற்றவர்கள் யார் என்பதை “தேவா” எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார். நடிகர் முரளி நடிப்பில் வெளிவந்த பொற்காலம் படத்தில் வரும் பாடல் தான் இவை..
“உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே..”
கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
இத கண்டிருக்கோம் நாம
ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ
ஊனம் என்னடா ஊனம் அட ஞானம் தானே வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்
கண்ணதாசன் சொன்னாங்கோ வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ..
சரி இவரு தத்துவா பாடல்கள் மட்டும் தான் எழுதியிருக்காரானு கேட்ட. இல்லைங்க இவரு சோகப் பாடல்களும் நிறைய எழுதி இருக்காருன்னு சொல்லலாம். ஒரு நண்பன் தன் காதலையும் சரி, காதல் தோல்வியையும் நண்பர்கள் கிட்டத்தான் சொல்லுவாங்க. அப்படி ஒரு நண்பர் தன்னுடைய காதல் கதையை சொல்லுவதை அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக சொல்லப்படும் பாடல் தான் இவை..
கண்ணாலே பார்த்து பார்த்து…
வந்த காதல் நூறுதான்…
கண்ணியமான காதல் உன் காதல்தானடா…
தனித்துவமான காதல் உன் காதல்தானடா…
கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
கவலை படாதே சகோதரா…
என்று இந்த பாடல் வரிகள் மூலம் நான் எத்தனை காதல் நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த உண்மையான காதல் உன் காதல் மட்டும் தான் நண்பா என்று சொல்லும் ஒரு அழகான பாடல்.
இவருக்கு மட்டுமே இங்கே ஒரு வாலிபர் தான் ஆசைப்பட்ட பெண்ணுக்காக பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவளோ அவனை ஏற்க மறுக்கிறாள். எத்தனை பெண்கள் என்னை காதலித்தாலும் என் மனம் ஏற்பது உன்னை மட்டும் தானே என்று அவன் காதலை அழகாக சொல்கிறார் தேவா.
சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்…
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்…
அண்ணன் கை லக்கு…
நீ வுட்டுக்கம்மா லுக்கு…
லைஃப்யின்னா புக்கு…
அதை புரட்டினாதான் கிக்கு
ஒரு பெண்ணுக்கு ஆண் தான் துணை அவனும் இல்லை என்றால்..? அவளின் நிலை..?
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா…
புருஷன் அணைக்கத்தான்…
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா…
ஏது உலகந்தான்
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமா இந்த பாடல் என்று பார்த்தால்., நண்பர்களுக்கும் இவர் எழுதியுள்ளார். நம்ப பழகிய நாட்களை மறக்க முடியவில்லையே., அந்த நாட்களும் இப்போது கிடைக்க வில்லையை. நம் நட்பை பற்றி இந்த ஊர் மட்டுமல்ல நாம் சென்று மகிழ்ந்த இடங்களும் நம்முடைய நட்பைப் பற்றி சொல்லும்..
நம்ம பழகினத மறக்கலயே…
அந்த பருவம் இப்போ கிடைக்கலையே…
அந்த காட்சிகளுக்கு நரையில்லயே…
இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே…
எனக்காக நீ நண்பனாய் கிடைத்து, எனக்காக உழைத்தாய் அதை நினைத்தாலே என் கண்கள் கலங்குகிறது. இதற்கெல்லாம் நான் என்ன செய்ய போகிறேன்.
கர்ணன் போலே கடமைய மதிச்சு…
தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்…
பாட்டுக்காரன் பாரதி சொன்ன…
கண்ணண போலவே எனக்கிங்கு பொறந்தவன்…
கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா…
என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய…
நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன்…
உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்…
நண்பனின் அருமையை சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து பெண்ணை, டாவடிட்ட கதையை பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி..?
கிளிஞ்சல் சிாிப்புக்காாி…
சங்கு கழுத்துக்காாி…
இரவில் விளக்கு போடும்…
லைட் ஹவுஸ் கண்ணு காாி…
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு…
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு…
அந்த கடல கேளு அலைய சொல்லும்…
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்…
நண்பர்கள், காதலர்கள், காதலில் தோல்வி அடைந்தவர்கள், என்று அனைவருக்கும் “தேனிசை தென்றல் தேவா” தனது பாட்டின் மூலம் உணர்த்தியுள்ளார்.