அத்திப்பழம் தண்ணி ஒன்னு போதும் நின்னு பேசும்…!!!
அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஒரு சிலர் உலர் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இவற்றை விட அத்திப்பழத்தை ஊற வைத்த நீரானது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
அதுவும் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சிறு அத்திப்பழத்தில் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடாமல், 2 அத்திப்பழத்தை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இருமடங்கு நன்மைகளைப் பெறலாம்.
அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..
1. அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அத்திப்பழத்துடன் அந்த நீரையும் குடிக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி, சீராக பராமரிக்க உதவும். பல்வேறு ஆய்வுகளில் அத்திப்பழத்தில் உள் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழ நீரை குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
2 கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பினால் அத்திப்பழ நீரைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழம் ஊற வைத்த நீருடன், அந்த பழத்தையும் உட்கொள்ளும் போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் .
3. உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . உடல் எடையைக் குறைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் போதுமான அளவில் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை பார்க்கலாம் .
4. இரத்த அழுத்தம் குறையும் அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அத்திப்பழ நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
5. இதய ஆரோக்கியம் மேம்படுத்த இது உதவி புரியும். அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
6. இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும் அத்திப்பழத்தில் உடலுறுப்புக்கள் செயல்பட தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் ஏரளமாக உள்ளது. அதுவும் ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளன.
எனவே ஆண்களுக்கு இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளைத் தடுக்கவும் அத்திப்பழ நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.
7. சரும ஆரோக்கியம் மேம்படும் அத்திப்பழ நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் திறம்பட மலத்தின் வழியாக வெளியேற்றுகிறது. உடலினுள் நச்சுக்கள் இல்லாவிட்டால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமம் அழகாக இருக்கும்.
அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பது ,நாம் அனைவரும் அறிந்த ஒன்றே .ஒரு சிலர் உலர் அத்திப்பழத்தை எடுத்துக்கொள்வார்கள்.ஆனால் இவற்றை விட அத்திப்பழத்தை ஊற வைத்த நீரானது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
அதுவும் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சிறு அத்திப்பழத்தில் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது . அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடாமல், 2 அத்திப்பழத்தை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இருமடங்கு நன்மைகளைப் பெறலாம்.
-நிரோஷா மணிகண்டன்