மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
பொதுவாக மழைக்காலம் என்பது வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, பருவ மழை நோய்களையும் அதிகரிக்கும். மழைக்காலத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டது. இதனால் டைபாய்டு, டெங்கு காய்ச்சல் , சிக்கன் குனியா, தொண்டை வலி ,சளி பிடித்தல் ,இருமல், தலைவலி போன்ற நோய்கள் உண்டாகும். இத்தகைய மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடுதல் கவனம் தேவை. மழைக்காலத்தில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு அழற்சி உண்டாகும். இவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க கட்டாயம் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
1. முதலில் மழைக்காலத்தில் அசைவ உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. குறிப்பாக இறைச்சியை தவிர்ப்பது நல்லது. இறைச்சியை உண்பதை விட கடல் சார்ந்த உயிரினங்கள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்ணலாம்.
ஏனென்றால் நீரில் உள்ள உணவில் தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதை தவிர்த்து பாதாம், பிஸ்தா போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
2. குளிர் காலத்தில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது நல்லது. மஞ்சளில் ஆன்டிபயாட்டிக் இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது இரைப்பையில் ஏற்படும் புண்களை தவிர்க்கும் . மஞ்சள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.
3. நாம் தினசரி உணவில் புரதச்சத்துக்கள் சேர்த்துக் கொள்வது மேலும் நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பருப்பு வகைகள், முட்டை, சோயா போன்ற புரதங்கள் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மழைக்காலத்தில் நோய் தொற்றாமல் பாதுகாக்கும்.
4. இஞ்சி மற்றும் பூண்டு நம் உணவில் சேர்த்துக் கொள்வது உடம்பில் ஏற்படும் காய்ச்சலை எதிர்த்து போராடும். செரிமானத்தை வலுவூட்டும். இஞ்சி தொண்டை வலியை குறைக்கும். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இஞ்சி சாற்றை தேனில் கலந்து கொடுக்கலாம்.
5. ஒரு சிலருக்கு மழைக்காலத்தில் உடற்பயிற்சி நடை பயிற்சி செய்யலாமா என்று கேள்வி இருக்கும். ஆனால் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் கண்டிப்பாக வீட்டிலேயே நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். மழைக்காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கும் ..
6. பொதுவாக மழைக்காலத்தில் பழங்கள், காய்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆப்பிள், மாதுளம், வாழைப்பழம், பப்பாளி போன்றவை சாப்பிடலாம். காய் வகையில் பாகற்காய் வெள்ளரிக்காய் போன்ற உணவுகள் சாப்பிடலாம். இதில் விட்டமின் ஏ மற்றும் சி உள்ளது .இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் .
7. முக்கியமாக மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவு என்பது அவசியம் அதும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே உண்ண வேண்டும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மழைக்காலத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்தில் எந்த உணவாக இருந்தாலும் மிதமான சூட்டில் சாப்பிடுவது நல்லது .
8. மழைக்காலத்தில் நீர் நிறைந்த உணவுகளை குறைத்து சாப்பிட வேண்டும்; காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வறுத்த உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கும். இதனால் வருத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
9. குறிப்பாக உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு வீக்கத்தை ஏற்படுத்தும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களின் நிலைமையை மோசமாக்கும். மேலும் மழைக்காலத்தில் அடர்த்தியான உடைகளை உடுத்த வேண்டும்.
10. மழைக்காலம் முடியும் வரை உடல் நல பிரச்சனைகளை தவிர்க்க உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்.
நிரோஷா மணிகண்டன்

















