பெண்களே இது உங்களுக்குத்தான்..!
பாயாசம் செய்யும்போது திராட்சை சேர்ப்பதற்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்து சேர்த்தால் பாயாசம் கூடுதல் சுவையில் இருக்கும்.
முட்ட பொடிமாஸ் செய்யும்போது மீல் மேக்கரையும் இதில் சேர்த்து செய்தால் முட்டை பொடிமாஸ் சுவையாக இருக்கும்.
சர்க்கரை பொங்கலில் அரை கப் தேங்காய் பால் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சர்க்கரை பொங்கல் சுவையாக இருக்கும்.
பகோடா செய்யும்போது கடலை மாவு சேர்ப்பதற்கு பதிலாக கடலைபருப்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து பின் வெங்காயம், உப்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து சுட்டால் பகோடா சுவையாக இருக்கும்.
கடலை பருப்பு வடை செய்யும்போது பருப்பை சூடான நீர் கொண்டு ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும், பின் வடை செய்யலாம்.
வேகவைத்த துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவை மீந்துபோனால் அவற்றை வீணாக்காமல் கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்தால் டேஸ்டாக இருக்கும்.
தக்காளியுடன் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வதக்கி பின் அரைத்து அதனை தோசையில் தடவி வேகவைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
அப்பளம் மற்றும் வடகம் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது பெருங்காயகட்டி போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது அதில் நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து சில நிமிடங்களுக்கு ஃபிரிஜ்ஜில் வைத்து பின் நறுக்கினால் பால் பிசிப்பு கையில் ஒட்டாது.