விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் தோற்றுவிட்டார் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக வைத்திருப்பது விஜயலட்சுமி சீமான் விவகாரம் தான். நாளை சீமான் காவல்நிலையத்தில் ஆஜாராக இருந்த நிலையில் நேற்றிரவு வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தனது வழக்கறிஞருடன் நேரில் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி காவல்துறையிடம் கடிதம் வழங்கினார்.
இதுக்குறித்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
போலீசார் காலில் விழுவதை விட, அரசாங்கத்தின் காலில் விழுவதை விட, விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் இந்த விவகாரத்தில் முற்றிலும் தோற்று விட்டார். இரண்டாவது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றால் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் சீமான் இவ்வாறு செய்து உள்ளார் என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
வீரலட்சுமியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post