சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடிங்குவோம், கண்ணை நோண்டுவோம் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பகீரங்கமாகா பேசியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் மக்களை அடிமைப்படுத்தும் ஒடுக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக உள்பட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமது முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதன தர்மத்தை பாதுகாத்தனர்.இப்போது சிலர் சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசுகிறார்கள். சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆவேசமாக கூறினார். மேலும், சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடிங்குவோம், கண்ணை நோண்டுவோம்.
சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் காட்டமாக கூறினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி வருகிறது.
இதையும் படிக்க : விவரம் தெரியாமல் பேசும் கர்நாடக முதல்வர்… அவங்க எப்போதும் அப்படி தான்…!