மறக்கமுடியாத காதல் நினைவுகள்..! அதில் அழகான இந்த பாடல் வரிகள்..!
நீங்க முதல் முதலில் உங்க அப்பா அம்மவோட கையில் இருந்தது எப்படி அவங்களுக்கு நியாபகம் இருக்குமோ அப்படித்தான் உங்களுடைய முதல் காதலும் உங்கள் நினைவில் கண்டிப்பாக இருக்கும்,அதற்க்கு பின்பு எத்தனை பேரை காதல் செய்தாலும் முதல் காதல் என்றைக்கும் மாறவே மாறாது, அந்த காதலியை பலவருடங்கள் கழித்து பார்த்தாலும் அந்த நினைவுகள் கண்முன் தோன்றும். நீங்களும் அந்த உணர்வுகளில் இருந்தது உண்டா..?
என்றைக்கு முதலில் உன்னை பார்த்தானோ அன்றைக்கே என் கண்களை தொலைந்து விட்டன ஆனால் நீ திரும்பி வந்து என் கண்களை கொடுத்துவிட்டு எதற்காக இதயத்தை பறித்து விட்டு சென்றாய் இந்த பாடலை இசையமைப்பாளர் “ஹரிஸ் ஜெயராஜ்” இசையில் பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிஷ் ராகவேந்திரா இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது .
தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்………
நீ என் காதலுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய், இல்லை என்று சொல்லுவதற்கு உனக்கு ஒரு நிமிஷம் போதும் அனால் அதை தாங்கி கொள்ளுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது கண்மணியே,
என் இதய கண்ணாடியில் உன் முகம் பதிந்து விட்டது. இனி இதுதான் உன் சொந்தம் என்று இதயம் சொல்கின்றது.
இசையமைப்பாளர் “ஏ ஆர் ரகுமான்” இசையில் பாடகர் சங்கர் மகா தேவன் பாடிய பாடல் இது.
இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி……..
நீ ஒரு மழையாக ,நான் ஒரு வெயிலாக இருக்கின்றோம் , நம் இருவரும் சேர்ந்தால் அது சுகமானதாக மாறிவிடும், சரியோ, தவறோ என்று தெரியாமல் உன்னில் வந்து சேர்ந்தேனோ இதை நான் எதிர் பார்க்க வில்லையே, இந்த பாடலை இசையமைப்பாளர் “ஹாரிஸ் ஜெயராஜ்” இசையில் பாடகர்கள் ஹரிணி, கார்த்திக் & கிரிஷ் சேர்ந்து பாடிய பாடல் இது.
சரி என்று தெரியாமல்…
தவறென்று புரியாமல்…
எதில் வந்து சேர்ந்தேன் நான்…
எதிர்பார்க்கவில்லை நான்…
உன்னை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது என் நெஞ்சில் பூத்த காதல் அதை மறக்க நினைத்தால் எனக்கு துன்பம் இன்னும் அதிகமாக ஆகிறது,நீ என் மீது பொழிந்த பாசம் நூறு வருடம் ஆனாலும் மறக்காது,இந்த பாடலை இசையமைப்பாளர் “ஹாிஸ் ஜெயராஜ்” இசையில் பாடகர்கள் ரூப் குமாா் ரதோட், திப்பு பாடிய பாடல்.
அஞ்சு நாள் வரை
அவள் பொழிந்தது ஆசையின்
மழை அதில் நனைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்…….
இந்த மாதிரி பாடலில் உனக்களுக்கு பிடித்த பாடல் எது..?
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..