“உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…” உழைப்பாளர்கள் தினம் வாழ்த்து..!!
உழைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைப்பாளர்களின் வர்க்கத்தை வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட இந்த பாடல்கள் நினைவிற்கு வரும்..
தினம் தினம் வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் உழைத்து கொண்டிருக்கும் நாம் எல்லாம் ஓர் இனம் தான். அதை சொல்லுவதே இந்த மே 1ம் தேதி தான். ஒரு நாளில் உழைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாடு தான் தங்கிடுமா..?
நித்தமும் பாடுபட்டு உழைக்கும்
யாவரும் ஓரினம் தான்
சத்திய வார்த்தை இதை
நமக்கு சொல்லுது மே தினம் தான்
நாமெல்லாம் வேலை நிறுத்தம்
செஞ்சா தாங்காது நாடு முழுதும்
நாம் இன்றி என்ன நடக்கும்
நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும்
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுடா ஹோய்..
எந்த தொழில் செய்தாலும் அதை நாம் மனநிறைவோடு செய்வது மட்டுமின்றி, செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும். இதை உணர்த்துகிறது இந்த பாடல் வரிகள்..
எந்த தொழில் செய்தால் என்ன
செய்யும் தொழில் தெய்வமென்று
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே..
அயராத உழைக்கும் இனமே என்றாவது ஒருநாள் ஜெயித்து விடும். அதுவே விழித்து இருந்தால் விரைவில் அந்த நாள் திருநாளாக கொண்டாடப்படும்.
உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்…
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் அயராது உழைத்து கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவரும் மதிமுகம்-ன் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்.