பீகார் ரயில் விபத்துக்கு இவங்க தான் பொறுப்பு..!! கையை நீட்டிய மல்லிகார்ஜுன கார்கே..!!
பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு அதிவிரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்..,
பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ள
இந்நிலையில், பக்சர் ரயில் விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, ரயில் விபத்துக்குப் ரயில்வே அமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..