பெருமாள் கோவில் புளியோதரை இனி வீட்டில் செய்யலாம்..!
மசாலாத்தூள் அரைக்க:
தனியா 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
வெந்தயம் கால் ஸ்பூன்
வெள்ளை எள்ளு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
புளி 1 கப்
எண்ணெய் தேவையானது
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
வேர்க்கடலை 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
பொடித்த வெல்லம் 1 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடான நீரை ஊற்றி ஊற வைக்கவும்.
ஒரு வாணலில் தனியா,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், எள்ளு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு நன்றாக ஆற வைத்து பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கடுகு,காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் புளிக்கரைசலை ஊற்றி அதில் மஞ்சள்த்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் வெல்லத்தை சேர்க்கவும்.
பின் அரைத்த பொடியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் தேவையுள்ள புளியோதரை குழம்புடன் சாதத்தை போட்டு கிளறி ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.
இந்த புளியோதரை கலவையை ஃபிரிஜ்ஜில் ஒரு மாதத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.