சுவையான குஸ்கா செய்யலாமா..!
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை ,கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரியாணி இலை
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
சீரகசம்பா அரிசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
ஒரு குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ மராத்தி மொக்கு ஜாவித்ரி கல்பாசி பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம்மசாலா தூள் , உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நெய் விட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
அவ்வளவுதான் குஸ்கா தயார்.