இன்று வித்தியாசமான காலை உணவு… பீட்ரூட் அப்பம்…
* கோதுமை மாவு – 1/2 கப்
* அரிசி மாவு – 1/4 கப்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* பெரிய பீட்ரூட் – 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)
* தயிர் – 2 டீஸ்பூன்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் அரிசி மாவு மற்றும் துருவி வைத்துள்ள பீட்ரூட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் தயிர் மற்றும் பெருங்காயத்தூளை சேர்க்க வேண்டும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து எண்ணெயில் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி வேகவைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பீட்ரூட் அப்பம் தயார்.