காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை.. போலீஸ் விசாரணை..
சென்னை பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜான் ஆல்பர்ட் (33). இவர், டிஜிபி அலுவலகத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளராக (எஸ்பிசிஐடி) பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜென்ஸி என்ற மனைவியும், 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு செல்வதாக புறப்பட்டவர் பின்னர், பணிக்கு செல்லாமல் அவரது அறைக்குள் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததை கண்டுஅதிர்ச்சி அடநை்த மனைவி கதவை திறக்க முயற்சித்துள்ளார்.
கதவு உள் பக்கமாக பூட்டியிருந்ததால் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ஆல்பர்ட் தற்கொலை செய்து கிடந்ததை பார்த்து கதறிய மனைவி கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்தது தெரியவந்தது.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் படி விரைந்து வந்த பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரின் தலைமையிலான போலீஸார் ஆல்பர்ட்ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரது தற்கொலைக்கு பணியில் ஏற்பட்ட மன உளச்சல் உட்பட வேறு ஏதேனும் காரணமா என பல கோணத்தி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.