பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் நாடுகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தாக்குதலால் பாகிஸ்தான் கலங்கி போய் கிடக்கிறது. இருப்பினும், பாகிஸ்தான் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டு மீடியாக்கள் அண்டப்புளுகு ஆகாசப்புளுகுகளை அவிழ்த்து விட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டதும், உடனே பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், ஸ்ரீநகர் விமானப்படை தளத்தை தாக்கி அழித்து விட்டதாம். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த வீடியோ பாகினஸ்தானிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்த மோதலின் போது, நடந்த வீடியோவை எடுத்து பரப்பி வருவதாக பிரஸ் பூயூரோ இன்பார்மேஷனின் பேக்ட் செக் பிரிவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சாமா சேனல், இந்தியா “தோல்வியை ஒப்புக்கொள்ள வெள்ளைக் கொடியை ஏற்றியது” என்று கூறியது. போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதை இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சாமா தொலைக்காட்சியில் வெளிவந்த ஒரு அறிக்கையில், கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள சோரா வளாகத்தில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு , 3 விமானங்களை இந்தியா இழந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளன.