பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் 9 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ள முரிட்கேயில் ,லஷ்கர் இ தொய்பாவின் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்ஸ் இ முகமது செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சியால்கோட் பகுதிகளிலும் இந்தியாவின் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்த தாக்குதல்களாவ் பாகிஸ்தான் நிலை குலைந்து போயுள்ளது. மக்கள் தெறித்து ஒடிய வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. தாக்குதலில் 80 முதல் 90 தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹேமர் என்பது ஏவும் உயரத்தைப் பொறுத்து 50-70 கிலோமீட்டர் வரம்பில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. குறைந்த உயரத்தில் இருந்து பயன்படுத்த முடியும். இந்த ஹேமர் குண்டுகளை ரஃபேல், மிராஜ் 2000D,எப் 16, தேஜாஸ் மிக் -29 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். ஹேமர் குண்டுகள் 125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, மற்றும் 1,000 கிலோ என பல ரகங்களில் தயாரிக்கப்படுகிறது.
ஸ்கால்ப் ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 250 கி.மீ-க்கும் அதிகமான தூரத்திற்குச் சென்று துல்லிய தாக்குதல் நடத்தும் ஏவுகணை இது.
லாய்ட்டரிங் முனிஷன் எனப்படும் தற்கொலை ட்ரோனும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வட்டமடித்துத் தாக்குதல் நடத்தும். இது தானாகவும் இயங்கும் அல்லது இதை மனிதர்கள் மூலமும் இயக்கலாம்.
இந்தியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணைகள் உள்ளே சென்று தாக்கி உள்ளன. ஆனால் பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை. பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை ரேடாரில் காண முடியவில்லை. இல்லையென்றால் அப்படியே பார்த்தாலும் அதை தடுக்கும் திறன் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதனால், வடிவேலுவின் 23ம் புலிகேசி படத்தில் சொல்வது போல யானைகளை வாடகைக்கு விட்டு விட்டோம் மன்னா என்கிற கதையாகத்தான் பாகிஸ்தானின் இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மீது இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கையை கவலை அளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது தொடர்பான, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது. தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இவை இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகள். சீனா பயங்கரவாதத்தை நிச்சயமாக எதிர்க்கிறது. இரு நாடுகளும் அமைதியாக இருந்து, கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் ‘ என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக இத்தகைய ராணுவ மோதலின் போது, சீனா வழக்கமாக பாகிஸ்தானுக்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவில் இருந்து சற்று விலகி நிற்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே சீனா முதன்மையாக வலியுறுத்துகிறது. பாகிஸ்தானை சீனா கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் சந்தை தற்போது சீனாவுக்கு தேவையென்பதால் சீனா கண்டனம் என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்துள்ளது.
இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்த இந்திய ராணுவ அதிகாரிகள் கர்னல் ஷோபியா குரோஷி, விங் கமெண்டர் லியாம்கோ சிங் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஒரு பாகிஸ்தான் குடிமக்கள் கூட கொல்லப்படவில்லை. தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.