புத்தர் சிலையை இந்த திசையில் வைத்து பாருங்க..!! மரணத்தையே அழித்துவிடலாம்..!!
சிரிக்கும் புத்தர் சிலைகளை வீடுகளில் வைக்கும்படி முன்னோர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. இந்த சிரிக்கும் புத்தர் சிலையின் பின்னணி என்ன? இதை வீடுகளில் வைத்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? இதோ சுருக்கமாக பார்ப்போம்..!!
நம்முடைய வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி சரியான திசையில் வைத்திருப்பதன் மூலம், வீட்டிற்குள் எப்போதுமே நேர்மறை ஆற்றல் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்தவகையில் கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாக திகழும் புத்தர் சிலையை, பலர் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.
புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதில் நல்லெண்ணமும், கருணையும், ஏற்படுவதாகவும், அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறுவதாகவும் நம்பப்படுகிறது.
புத்தர் சிலைகளில் பல வகைகள் உள்ளதாகவும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வைப்பது நல்லது என்று சில பேர் சொல்லிகிறார்கள்.
எந்த திசையில் புத்தர் சிலை வைத்தால் நல்லது நடக்கும்
புத்தர் சிலையை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசை நோக்கி சிலையை வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
சிரிக்கும் புத்தர் சிலையை ஹால், டைனிங் ஹால் போன்ற இடங்களில் தென் கிழக்கு திசையில் வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் உயரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த சிரிக்கும் புத்தருக்கு பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. அதை ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம் வாங்க புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் என்று பொருள். எனவே, கவுதம புத்தருக்கு முன்பே எத்தனையோ புத்தர்கள் வாழ்ந்தனர்.. அதில், ஒருவர்தான் ஹொடாய். இவர் ஒரு ஜென் துறவியாவார்.. இவர் ஜப்பானை சேர்ந்தவர் என்றும், கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதில் முக்கியமா ஜென் துறவிகள் பெரும்பாலானோர், வார்த்தைகளை பயன்படுத்தாமல் செயலாலும், முயற்சியாலும் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்.
அதாவது, சிரிப்பது, பார்ப்பது, ஓவியம் வரைவது போன்ற செயல்களும் மக்களுக்கு விழிப்புணர்வை தந்தவர்கள். இந்த வழியில் வந்தவர்தான் ஹொடாய் என்ற ஞானி.. இவரும் மக்களிடம் சிரித்தும், மகிழ்வித்தும் விழிப்புணர்வை தந்தவர். சிரிப்பின் மூலமாக மக்கள் மனதை ஒருமைப்படுத்தியவர்..
இவரின் தொப்பை சிரிப்பு பற்றி சிறு கதை :
அவருடைய தொப்பை குலுங்க குலுங்க சிரித்து சிரித்தே, பிளவுபட்ட மக்கள் மனங்களை ஒன்றிணைத்தவர்னு சொல்லப்படுகிறது. இவரை பார்த்ததுமே மக்களும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம், அதுமட்டு இல்லை ஹொடாய் நடனமாடினால் அவர்களும் சேர்ந்து நடனமாடினார்களாம், மேலும் ஹொடாயின் சிரிப்புதான், மக்களுக்குள்ளேயே புதுவிதமான மாற்றத்தை உண்டுபண்ணியதா சொல்லப்படுகிறது.
அதனாலதான், இவரை “சிரிக்கும் புத்தர்” என்றும், “மகிழ்ச்சிப் புத்தர்” என்றும் மக்கள் அன்பால் அழைத்தார்களாம். ஒருவார்த்தைகூட பேசாமல் தன்னுடைய சிரிப்பாலேயே மனித மனங்களை ஒன்றுசேர்த்த துறவி ஹொடாய்.
சுருக்கமாக சொல்லப்போனால், “மரணத்தை பார்த்து சிரித்தால், அந்த மரணத்தையே அழித்துவிடலாம்” என்ற நம்பிக்கையை விதைத்தவர் ஹொடாய்..
அதனால் தான், வீடுகளில் என்றுமே மகிழ்ச்சி பொங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இவரது சிலையை சிரிக்கும் புத்தர் சிலையாக, வீடுகளில் வைத்திருக்க சொல்கிறார்கள்..!!!
– கவிப்பிரியா