நாம் வாழ்க்கையை தீர்மானிப்பது கல் அல்ல..!! விவசாயின் கதை.. குட்டி ஸ்டோரி-53
ஒரு ஊர்ல ஒரு விவசாயி ஒருத்தர் இருக்காரு அவரே அவருடைய நிலத்துல காலையிலிருந்து மாலை வரை கடுமையா உழைப்பாரம் ஆனா அப்படி கடுமையா உழைச்சும் அவர் வாழ்க்கையில எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என சொல்லலாம்…
இப்படியே வாழ்க்கை போக ஒரு நாள் வழியில் நடந்து போயிட்டு இருக்க அப்போ நடந்து போயிட்டு இருக்கும் போது நீல கலர் கல்லு ஒன்னு கீழ இருந்தது அடடா கல்லு அழகா இருக்கே அப்படின்னு சொல்லி அந்த கல்ல வீட்டுக்கு எடுத்துட்டு போறாரு.. அந்த கல்லு வந்ததுக்கு அப்புறம் அவரோட வாழ்க்கையே மொத்தமா மாறிடுச்சுனு சொல்லலாம் அதுக்கு அப்புறம் அவருக்கு ஊர்ல அவருக்கு நல்ல மரியாதை நல்ல விளைச்சல் நிறைய விஷயங்கள் வந்து அவர் வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்தது..
அவரோட வாழ்க்கையை நல்லா சந்தோசமா போயிட்டு இருந்தது ஒரு நாள் அவருக்கு அந்த கல்ல பாக்கணும்னு சொல்லி ஆசையா இருந்துச்சு அவரோட மனைவி கிட்ட அந்த பெட்டியை எடுத்துட்டு வா எனக்கு அந்த கல்ல பாக்கணும் அப்படின்னு சொல்றாரு அவரோட மனைவி என்ன சொல்றாங்க முதல்ல இருக்கிற வேலைய பாருங்க அப்படின்னு சொல்றாங்க..
ஆனா அவரு கேட்கவே இல்லை பிடிவாதமாய் இருந்தார். எனக்கு அந்த கள்ள பாத்தே ஆகணும் அப்படின்னு ரொம்ப பிடிவாதமா இருக்காரு. சரி இருங்க அப்படின்னு சொல்லி அவரோட மனைவி போய் பெட்டியை எடுத்துட்டு வராங்க எடுத்துட்டு வந்ததுமே ஆசை ஆசையா அந்த பெட்டியை திறக்கிறா..ர் திறந்ததுமே நீல கலரா இருந்த கல்லு வெள்ளை கலரா இருந்துச்சு ரொம்ப ஆச்சரியப்படுகிறார்..
அதுக்கு அப்புறம் அவங்க மனைவி கிட்ட கேட்க அப்போதான் அவங்க நடந்ததையே சொல்லுறாங்க.., ஒருநாள் அந்த கல்லை சுத்தம் செய்யலாம்னு., அந்த விவசாயியோட மனைவி எடுக்கும் போது அந்த கல்லு கீழ விழுந்து சுக்கு நூறா உடைந்ததால் அதுக்கு பதிலா வேற ஒரு வெள்ளை கலர் நான் வச்சுட்டேன்.. அப்படின்னு சொல்லி அவங்க மனைவி சொல்றாங்க இது எப்ப நடந்தது அப்படின்னு சொல்லி அந்த விவசாயி கேட்கிறார் நீங்க எடுத்துட்டு வந்த மறுநாளே அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க அவரும் கேட்கிறார்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா அந்த கல்ல வச்சி தான் வாழ்க்கை நல்லா இருக்கு அப்படின்னு சொல்லி அந்த விவசாயி நெனச்சிட்டு இருக்காரு. ஆனா அப்படி எதுவுமே இல்லை இந்த உழைப்பவன் தன்னம்பிக்கையும் தான் அவரோட முன்னேற்றத்துக்கு காரணமே அவர் என்ன நினைச்சிருக்காருனா நமக்கு அந்த கல்லு தான் அதிர்ஷ்ட கல்லு அப்படின்னு நினைச்சிருக்காரு.
– கௌசல்யா