இந்தியா கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துடன் விளையாட தயாராகி வருகிறது. அதற்காக வீரர்கள் இன்று வங்கதேசம் செல்கின்றனர். இதனை இந்தியா அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளது வைரலாகியுள்ளது.
2023ம் ஆண்டு நடக்கவிருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்காக இப்போதிலிருந்தே அணிகள் தயாராக ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து உலக கோப்பை தொடர்களில் சொதப்பும் இந்தியா இந்த முறை சொந்த மண்ணிலாவது வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட வங்கதேச சுற்றுப்பயணத்தை இந்தியா விளையாட உள்ளது.
இந்த இரு தரப்பு போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அணி களமிறங்குகிறது வரும் ஞியாறு அன்று தொடங்கும் இந்த தொடர் இந்த மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா அணியின் வீரர்கள் வங்கதேசத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர் அப்போது அதை ஒரு புகைப்படம் எடுத்து விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து இந்திய அணியின் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.