ஒரு கல்யாணத்துக்கு பின்னாடி இவ்வளவு சுவாரசியம் இருக்கா.?
ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.
1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல மாலையெல்லாம் போட்டுகிட்டு வெக்கப்பட்டுட்டு இருந்தா அது கல்யாணப் பொண்ணு.., அதுவே அந்தப் பொண்ண விட கொஞ்சம் அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு கல்யாணதத்துல ஜாலியாக சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.
2. கல்யாண ஆல்பம்ல வித விதமா போஸ் கொடுத்தா அது கல்யாண மாப்ளை, பொண்ணு.. அதுவே அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியுறமாதிரி ஒரே போஸ்ல ஒரு பொண்ணு நிண்ணுக்கிட்டு இருந்தா. அது கல்யாண மாப்பிளையோட அக்கா.
3. ஆளுக்கும் உடைக்கும் சம்பந்தமே இல்லனு, சொல்லுறா மாதிரி மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன்.
4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது ஓடியாருறது வரவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். கல்யாணத்துக்கு வர மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, கல்யாண பொண்ணோட தங்கச்சி அப்புறம் அவங்க சொந்தகார பொண்ணுனு எதாவது ஒரு பொண்ணு கரெக்ட் பண்ணனும்னு சுத்திக்கிட்டு இருப்பான்..
5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டு வைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். கல்யாணம் முடிஞ்சு போறது வரைக்கும் மாப்பிளையோட நண்பர்கள் பண்ற அலப்பறை இருக்கே.., அய்யோ..
6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, எவண்டா அவன் நான் வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவன் வேற யாரும் இல்லை.., மாப்பிளை வீட்டோட பங்காளியாகவோ அல்லது மாப்பிளையோட தாய்மாமனாக தான் இருக்கும்..,
அவனை யாருமே மதிக்காம இருப்பாங்க ஆனா பையனோட அம்மா மட்டும் அவனை விழுந்து விழுந்து கவனிப்பாங்க.., அப்போ யாருனு உங்களுக்கே புரிஞ்சு இருக்கும்..
7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.
அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி சொந்தமா இருக்கும், அந்த பையனுக்கு இவங்க பொண்ணை கட்டலாம்னு இருந்து இருப்பாங்க.., ஆனா பையன் வேண்டாம் சொல்லி இருப்பான்
8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர் தான் பொண்ணோட அப்பா.
9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப் பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிடுவாங்களோ என்கிற பீதியிலயே இருக்கும்.
10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க.
11. கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம்.
12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறது மா இருப்பாய்ங்க.
அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன்.
13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது, பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.
-வீர பெருமாள் வீர விநாயகம்