போர் ஆன சமையலில் ஜோரான.. ஒரு, இறால் முட்டை மசாலா..!!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையானது
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
உப்பு – 3/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
இறால் – 250 கிராம்
முட்டை – 3
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – தேவையானது
செய்யும் முறை:
இறாலை நன்கு மஞ்சள் சேர்த்து சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயினை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சிரிது நேரம் கழித்து சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை.
பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
மேலும் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவேண்டும்.
அதன் பின் நறுக்கிய தக்காளியை கலந்து சிறிது உப்பும் தூவி நன்றாக குழையும் வரை வதங்கிய பின் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூளுடன் இறாலை போட்டு மசாலாவுடன் கிளறிவிட்டு மூடி வைத்து 2 நிமிடம் வேகவைக்க வேண்டும்…
பிறகு மூடியை திறந்து இறாலை ஒரு பக்கமாக கொண்டுவந்து, மறுபக்கத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும், முட்டை வெந்ததும் இறாலுடன் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கடைசியாக மிளகு தூளை தூவி விட்டு கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் இறால் முட்டை மசாலா ரெடி.
Discussion about this post