இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பயனுள்ள குறிப்புகள்..!
வெங்காயம் வெட்டும்போது கண்களில் வரும் நீரை தடுக்க வெங்காயத்தை இரண்டாக வெட்டி நீரில் போட்டு வைத்து பின் நறுக்கலாம்.
ரசம் தாளிக்கும்போது நெய்யில் கடுகு மற்றும் சிறிது மிளகு சேர்த்து தாளித்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
மீதமான தேங்காய் துருவலை லேசாக வதக்கிய பின் சிறிது உப்பு கலந்து வைத்தால் மறுநாள் வரை கெடாமல் இருக்கும்.
கத்தரிக்காய் கூட்டு, பொரியல் எது செய்தாலும் இறக்கும் சமையத்தில் சிறிது கடலை மாவு தூவி கலந்துவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
அடை செய்யும்போது காய்கறிகளுடன் சிறிது கீரையும் நறுக்கி சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
காராபூந்தி செய்யும்போது எண்ணெய் நன்றாக சூடாக இருந்தால் தான் பூந்தி நன்றாக உருண்டையாக வரும்.
பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது மிளகு போட்டு வைத்தால் நமத்து போகாமல் இருக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
கொத்தமல்லி இலைகள் வாடி போகாமல் இருக்க டப்பாவின் அடியில் ஒரு டிஸ்யூ பேப்பர் மற்றும் அதன் மேலேயும் ஒரு டிஸ்யூ பேப்பரையும் போடலாம்.
ரவை தோசை செய்யும்போது அதனுடன் சிறிது கோதுமை மாவையும் சேர்த்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.
முளைக்கட்டிய பச்சை பயிறை அன்றாடம் காலையில் உணவாக சாப்பிட அல்சர் நோய் குணமாகும்.
புட்டு மற்றும் இடியாப்பம் செய்யும்போது மாவில் சுடான நீர் ஊற்றி பிசைந்து செய்தால் நல்லா சாஃப்டாக இருக்கும்.