குழந்தைகள் விரும்பும் போன்வீட்டா இனி நொடியில் தயாரிக்கலாம்
இக்காலகட்டத்தில், உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்பி பருகுகிறார்கள்.
இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்டிஆக்ஸிடன்ட், போன்ற மற்ற சத்துகளும் கிடைக்கிறது.
இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது. இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம்- 50 கிராம்
முந்திரி- 50 கிராம்
கோகோ பவுடர்- 3 ஸ்பூன்
வால்நட்- 8-10
கேழ்வரகு மாவு- 3 ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேழ்வரகு மாவையும் அதே கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வறுத்த நட்ஸ் கலவைகளை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.
பொடித்த கலவையுடன் வறுத்த கேழ்வரகு மாவு, கோகோ பவுடர், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த பவுடரை அதன் ஈரத்தன்மை போகிற அளவுக்கு வெளியே வைத்து பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இப்பவுடரை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)