Kokilaksha என்னும் மூலிகை தமிழிலும் மலையாளத்திலும் நீர்முள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இந்த நீர்முள்ளி மூலிகை வாய்வுத் தொல்லை, சிறுநீரகக் கோளாறுகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் முலப்பொருளாகப் பயன்டுத்தப்படுகிறது. இந்த நீர்முள்ளியின் விதை, இலை, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன ஆகியவை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். Health Benefits of Neer Mulli
ஈரமான பகுதிகள், நெல் வயல்கள், ஏரி, குளங்கள் உள்ள பகுதிகளில் இந்த நீர்முள்ளி அதிகமாகக் காணப்படும். ஆன்டி இன்பிளமேட்டரி, ஆன்டி டயாபடீக், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டது. ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இதில் அதிகம். இந்த நீர்முள்ளி தாவரம் நம் உடல் ஆரோக்கியத்தில் செய்யும் அற்புத மாற்றங்கள் பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம் வாங்க… Health Benefits of Neer Mulli
ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் நீர்முள்ளி
நீர்முள்ளிச் செடியில் இருந்து கிடைக்கும் விதை ஆண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மை, குழந்தைப் பேறின்மை ஆகிய பிரச்சினைகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களையும் விந்தணு உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இதனால் ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்து வளமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
(முடக்குவாதம்) சரிசெய்யும் நீர்முள்ளி Health Benefits of Neer Mulli
Rheumatoid Arthritis என்பது நாள்பட்ட இன்பிளமேஷனால் ஏற்படும் பிரச்சினை. உலகம் முழுவதும் ஆண்களைக் காட்டிலும் பெரும்பாலான நடுத்தர வயது பெண்கள் இந்த வகை இன்பிளமேஷன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நீர்முள்ளி இலை மற்றும் விதையின் பொடியை எடுத்துக் கொள்வதால் இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் Rheumatoid Arthritis முடக்குவாதத்தின் அறிகுறிகளை வெகுவாகக் குறைக்கின்றன. அதோடு ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்ட நீர்முள்ளி Health Benefits of Neer Mulli
நீர்முள்ளி மூலிகையின் இலை மற்றும் வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மூலப்பொருளில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
இது பருவ காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களில் இருந்தும் நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து விடுபடவும் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் நீர்முள்ளி மூலிகை
டயாபடீஸ் மெல்லிடஸ் (diabetes mellitus) என்றும் நீரிழிவு நிலைகளில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் ப்ரீ ரேடிக்கல்ஸ்களை அதிகரித்து விடுகின்றன.
இந்த நீர்முள்ளியில் ஆன்டி டயாபடீக் பண்புகள் உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தி ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.
நீர்முள்ளி மூலிகையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
நீர்முள்ளி இலை மற்றும் விதையின் பொடியை தான் மருந்தாகப் பயன்படுத்துகிறோம். இந்த நீர்முள்ளி பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர Rheumatoid Arthritis பிரச்சினை குறைய ஆரம்பிக்கும்.
ஆண்மைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு நீர்முள்ளியை கஷாயமாக செய்து சாப்பிடலாம்.
அதேபோல பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த பொடியை பாலில் கலந்து இரவு வேளையில் குடித்து வரலாம்.
ஆனால் இதை எடுத்துக் கொள்ளும் அளவு உங்களுடைய நோய் நிலைகளைப் பொருத்து மாறுபடும். அதனால் ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரையின் படி இதன் அளவைத் தீர்மானிப்பது நல்லது.
பெரிய அளவில் இந்த நீர்முள்ளியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதனால் அதுபற்றிய பயம் பெரிதாக இல்லை.