கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியது உண்டு. கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்தகைய குற்றச்சாட்டை வைரமுத்து மீது சின்மயி வைத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சின்மயிக்கு ஆதராவாக தனது நீண்ட கால நண்பரான வைரமுத்துவை கங்கை அமரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கங்கை அமரன் கூறியதாவது, பாடகி சின்மயி இந்தளவுக்கு உயர்வதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் மீடுவில் வைரமுத்து மீது அவர் குற்றம் சுமத்தி வருகிறார். வைரமுத்துவின் பாசிடிவான இமேஜை கண்டு யாரும் சின்மயிக்கு துணை நிற்காமல் போது துரதிஷ்டவசமானது.
ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன் வைக்கும் போது, துறையை சேர்ந்தவர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கூட, சின்மயிக்கு ஆதரவு குரல் எழுப்பவில்லை. வைரமுத்து எனது நண்பர் என்பதற்காக, நான் அவர் செய்யும் தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்பதில்லை. வைரமுத்து வேண்டுமானால் சிறந்த கவிஞராக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதர் என்று சொல்லமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு வைரமுத்து தன்னை படுக்கைக்கு வரும்படி அழைத்ததாக சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். வைரமுத்து இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.