இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி இன்று(மார்ச்.04) காலை 9.30 மணிக்கு தொடங்கி மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முறையாக களமிறங்க உள்ளார். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
இலங்கை: திமுத் கருணாரத்னே (கே), லஹிரு திரிமான்னே, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமாரா.