கோல்ஃப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்..!!
பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவிற்காக கலந்து கொண்ட அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் மொத்தம் 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், தென் கொரியாவின் ஹியுஞ்சோ யூ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்தப் பதக்கத்தின் மூலம் ஆசிய விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “அதிதி அசோக்”கிற்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துகொள்வோம்…
Discussion about this post