தீராத நரைமுடி பிரச்சனையை தீர்க்கும் ஒரு பொருள்..!!
முடி வெள்ளையாவது என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வந்தால் அது சாதாரண ஒன்றாக இருக்கலாம். அப்படி வயதானதும் நரைமுடி வந்தால் அது இயற்கையும் கூட ஆனால் இப்போதுலாம் நரைமுடி என்பது சிறு வயதில் இருந்தே சிலருக்கு காணப்படுகிறது. அப்படி இளம்வயதிலே வரும் நரைமுடி பிரச்சனையால் அவர்களுக்கு ஒரு விதமான தயக்கமும் மனஉலைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
சிறு வயதில் வரும் இளநரைக்கு நாம் நாட்டுமருந்து கடையில் மூசாம்பரம் என்னும் பொருளை வாங்கி ஒரு ஹேர் பேக் செய்து பயன்படுத்தலாம்.
ADVERTISEMENT
மூசாம்பரம் என்பது ஒன்றும் இல்லை நான் கற்றாழையை வெட்டியப்பின் அதில் இருந்து வரும் மஞ்சள் நிற திரவத்தை வெட்டிவிடுகிறோம், அப்படி வரும் மஞ்சள் நிற திரவத்தை சேகரித்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் மூசாம்பரம். வாங்க மூசாம்பரம் வைத்து ஹேர் பேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்
மூசாம்பரம்
செய்முறை:
முதலில் நன்றாக முற்றிய தேங்காய் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அந்த தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து கொண்டு அதை வடிகட்டி ஒரு அரை டம்ளர் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வடிக்கட்டி எடுத்து வைத்துள்ள அந்த பாலில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு ஒரு 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
5 மணி நேரம் கழித்து பார்த்தால் மூசாம்பரம் பாலில் நன்றாக கரைந்து பால் கெட்டியாகி இருக்கும்.
ஹேர் பேக் பதத்திற்கு கெட்டியானதும் அதை உங்கள் தலை முடியில் அப்ளை செய்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதற்கு பிறகு அதை அலசிவிடு தலைக்கு குளித்துவிடவும். இப்படி வாரம் இருமுறை செய்து வர நரைமுடி மறையும்.
இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி வருவதும் குறையும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)