உங்கள் குழந்தைக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கிறதா..? இதை செய்து பாருங்கள்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இயல்பு தான், 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால். அவர்களை, கட்டாயம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த பழக்கம் எதனால் ஏற்படுகிறது, அதை சரி செய்வதற்கான தீர்வு பற்றி விளக்கம் கொடுக்கிறார். மருத்துவர் வெங்கடேஷ்.
இரவு நேரத்தில் குழந்தைகள் உறங்கும் பொழுது சிறுநீர் கழிப்பதை “நாக்டர்னல் என்யூரிஸிஸ்” என்பார்கள், இது மரபு ரீதியான பிரச்சனை எனலாம். சிறுநீர் தொற்று காரணமாக, கால்சியத்தின் அளவு அதிகரித்தால் இந்த பிரச்னை ஏற்படும்.
இதை சரி செய்ய இரவு 7 மணிக்கு மேல் அவர்களுக்கு அதிக இனிப்பு பொருள், டீ, காபி தரக் கூடாது, உறங்குவதற்கு முன் சிறுநீர் கழித்து விட்டு உறங்கச் செய்யலாம். உறங்கிய பின் ஒரு மணி நேரம் கழித்து அவர்களை எழுப்பி சிறுநீர் கழிக்க விடச் செய்ய வேண்டும்.
ஒரு மாதம் இதை தொடருந்து செய்தால், குழந்தைகள் இரவில் உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதை விட்டுவிடுவார்கள்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் நலன் பற்றி தெரிந்துக்கொள்ள தொடருந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி