சித்திரா பெளர்ணமி விரதம்..! கிடைக்கும் வரம்..!! முருகரின் மந்திரம்..!
சித்திரா பெளர்ணமி என்பது இந்த மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமியை சித்திரா பெளர்ணமி என அழைப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது மட்டும் இதன் பின்னணி அல்ல..,
சித்திரா பெளர்ணமியானது சைவ மக்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்த ஒரு தினம். அந்த காலத்தில் சைவ மக்கள் சித்திரா பெளர்ணமி அன்று புனித வழிபாடு தளங்களுக்கு சென்று கஞ்சி காய்ச்சி புத்திரனாரின் கதை படித்து காட்டி எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
காலப்போக்கில் அது சிவனுக்கு பிரசித்தி பெற்ற நாளாக மாறியது.
இன்றைய நாளில் சிவன் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களுக்கும் உகுந்த நாள்.., அதனால் தான் பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு செய்யப்படும்.
குறிப்பாக இன்றைய நாளில் முருகருக்கு விரதம் இருந்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும். அதிகாலையே எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றி பூஜைகள் செய்து விரதத்தை தொடங்கலாம்..,
விரதம் இருப்பவர்கள் காலை பூஜை தொடங்கியதில் இருந்து மாலை பூஜை முடிக்கும் வரை பழம் பால் மற்றும் நீர் ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
விரதம் இருக்க முடியாதவர்கள் இன்றைய நாளில் உப்பில் உணவை சாப்பிட வேண்டும் .
இன்றைய நாளில் முருகருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற நாள். எனவே கார்த்திகை பெண்கள் இன்றைய நாளில் முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.., குறிப்பாக இன்று அசைவ உணவு சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
விரதம் இருக்கும் பெண்கள் கோவில் பால் வாங்கி சென்று அபிஷேகம் செய்யலாம்.., மேலும் இன்றைய நாளில் உப்பில்லா உணவை சமைத்து சாப்பிட்டால் முருகரின் அருள் கிடைக்கும்..
காலையும் மாலையும் வீட்டில் சுப்பிரபாதம் ஒலிக்க செய்ய வேண்டும்..,
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
முருகன் துதி உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
என்ற மந்திரத்தை நாம் குறைந்தது மூன்று முறையாவது உச்சரிக்க வேண்டும்.., அப்படி உச்சரித்தால் நாம் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறும்., என்பது ஐதீகம்.
இன்றைய நாளில் சித்ர குப்தா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைப்பாராம்.., எனவே இந்த நாளில் சித்ரா குப்தா விரதம் இருந்து வழிபட்டால்.., நாம் செய்த பாவங்கள் நீங்கி விடுமாம்..
காலை மற்றும் மாலை வேலையில் வீட்டில் தீபம் ஏற்றி சித்ர குப்தா நாமத்தை துதிக்க வேண்டும்., அப்படி இருந்தால் பாவங்கள் மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள கேது தோஷங்களும் நீங்கும்..
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,
லேகணிபத்த தாரிணம்,
சித்தர ரக்னாம்பரதரம்,
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
வீட்டின் பூஜை அறையில் தென்னை ஓலையில் சித்ர குப்தன் படி அளக்க என எழுதி வைத்து அவரை பூஜித்து வழிபட்டால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. என்பது ஐதீக நம்பிக்கை.
இன்றைய நாளில் தெய்வங்களுக்கு மட்டுமின்றி நம் முன்னோர்களுக்கும் வழிபாடு செய்யலாம்.., தாயை இழந்த ஆண் மகன்கள் நீர் நிலைகளில் குளித்து விட்டு தர்ப்பணம் கொடுக்கலாம்.., அதன் பின் பிண்டை வைத்து ஜீவ ராசிகளுக்கு உணவு அளிக்க வேண்டும்..
அதன் பின் வீட்டிற்கு வந்து அவர்களது புகை படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி படையலிட்டு.., வழிபட்டு குடும்பத்தினருடன் உணவு சாப்பிட வேண்டும்.., இவ்வாறு செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்..
இன்றைய நாளில் நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முறையான விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.., கடமைக்கு என்று விரதம் இருக்க கூடாது.., குறிப்பாக உங்களின் உடல் ஆரோக்கியம் புரிந்து கொண்டு விரதம் இருக்க வேண்டும்.