எஸ்.ஜானகி பாடல்கள் நினைவு இருக்கிறதா..? இன்றுடன் அவருக்கு..?
இந்தியாவில் புகழ் பெற்ற திரைப்பட பாடகர் எத்தனை பேர் இருந்தாலும்.., இவரை போல ஒரு சிறந்த பின்னணி பாடகரருக்கு நிகர் யாரும் இல்லை என சொல்லலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், மொழியிலும் ஒரு பாடகர் பாடலாம்.., ஆனால் குழந்தையாகவும், குமரியாகவும், வயதானவர் குரலிலும் பாட இவரால் மட்டுமே முடியும்.
எஸ்.ஜானகி :
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் பாடிய முதல் பெண் பாடகர் இவரே ஆவர்.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.., அதில் சில பாடல்களை தாமே எழுதி இசையும் இசைதுள்ளார்.
முதல் பாடல் :
இவர் தெலுங்கு பிராமான குடும்பத்தை சேர்ந்த பெண் மணி ஆவார், சங்கீதத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நாதசுரா மேதை பைடி சாமி என்பவரிடம் முறையாக பாட்டு கற்றுக்கொண்டார்.
அதன் பின் கோவில்களில் ஆன்மிக பாடல்களை பாடினார்.., இவரின் குரல் இனிமையால்.., இவரின் பாடலை கேட்ட ஒருவர் ஏவிஎம் ஸ்டூடியோவில் இவரை அறிமுக படுத்தினார்.
அதன் பின் 1957ம் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் “பெண் ஆசை பாலப்போனது” என்ற பாடலை பாடினார்.
அதன் பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிட்டியது.., சினிமாவில் இவர் பாடகியாக அறிமுகமான நாளில் இருந்து தமிழில் 40 ஆயிரம் பாடல்களும்.
கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களும் பாடியுள்ளார்.
பாடல்கள் :
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருந்தாலும் ஒரு சில பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்..
அதிலும் ” தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ” என்ற பாடலாக இருக்கட்டும்…
கூட்டத்தில் கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா..? என்ற பாடல் பாலசுப்பிரமணியும் இவரும் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே ஒரு.. தனி சுகம் என சொல்லலாம்.
ஜானி படத்தில் வந்த “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒடுதே” என்ற பாடல்கள் மனதில் எதோ மாயம் செய்யும் இசைஞானி இளையராஜாவின் இசையிலும் இவரது குரலில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும்.. ஒரு தனி சுகமே..
“எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது” என்ற பாடல் 80ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை ரசிக்க தூண்டிய ஒரு பாடல் என சொல்லலாம்.
குறிப்பாக இவர் மாறி மாறி பாடிய ஒரு பாடல் பற்றி நாம் பார்த்தாக வேண்டும்..,
அது தான் மகளிர் மட்டும் படத்தில் வெளியான “மொத்துனு மொத்தனும் மொத்தனும் குத்து குத்துனு குத்தனும் பார்த்து..” என்ற பாடல்..
90ஸ் களின் மனதில் இன்று வரை ஒலிக்கும் இந்த பாடலும் இவர் பாடியது தான்..,
“மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்.., என்ற பாடலும்
மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறா கூடாதா என்ற பாடலும் சரி..,
இன்று வரை நாம் தெய்வமாக நினைக்கும் அம்மாவிற்கு இவர் பாடிய பாடலே சுப்பிரபாதம் என சொல்லலாம்.
“வேலையில்லா பட்டதாரி” படத்தில் வந்த அம்மா அம்மா எங்க அம்மா பாடலில் “எங்க போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தெரிவேன்” என்ற பாடல் வரிகள் இவர் பாடியதே.
விருதுகள் :
1992ம் ஆண்டு இலங்கையில் இவருக்கு “ஞான கான சரஸ்வதி” என்ற விருதும்,
2013ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது..,
இதுவரை இவருக்கு 4 தேசிய விருதும், 3 ஆஸ்கார் விருது என பல விருதுகளை பல நாடுகளுக்கு சென்று வாங்கியுள்ளார்.
ஜானகி அம்மாவின் பாடல்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வார்த்தைகள் போதாது.,
கீதையின் சங்கீதமாய் என்றென்றும் நம் மனதோடு கேட்கும் பாடலில் நம்மை மகிழ வைக்கும் ஜானகி அம்மாவிற்கு மதிமுகம் சார்பாக 86ம் ஆண்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..,
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..