கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலாமானார். அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். 12 ஆண்டுகளாக போப் ஆண்டவர் பதவியில் இருந்த அவருக்கு வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில், ஈஸ்டர் முடிந்த அடுத்த நாள் போப் பிரன்சிஸ் உயிர் பிரிந்தது.
அவருக்கு வயது 88 ஆகிறது. தற்போது, அவரின் உடல் எல்பால்ம் செய்யப்பட்டுள்ளது. வாடிகனிலுள்ள புனித பீட்டர் ஆலய வளாகத்தில் 3 நாட்கள் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்,போப் பிரான்சிஸ் பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ்ஸின் இயற் பெயர் ஜார்ஜ் மரியோ பெர்ஜோஜிலோ என்பதாகும். இவருக்கு 12 வயதாக இருந்த போதே, அமாலியா என்ற சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியை புரபோஸ் செய்த போதே, நீ என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் பாதிரியார் ஆகி விடுவேன் என்று கூறியுள்ளார்.
அதே போல, அந்த பெண் காதலை ஏற்கவில்லை. ஆனால், தானாகவே அவர் பாதிரியாராகி விட்டார். பின்னர், போப் ஆண்டவராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதல் ஐரேப்பியர் அல்லாத போப் என்ற பெருமையும் பிரான்சிஸ்க்கு உண்டு.
அதோடு, போப் தீவிர கால்பந்து ரசிகர். கடந்த 30 ஆண்டுகக்கு முன்பு தொலைக்காட்சிகளில் கால்பந்து ஆட்டங்களை விரும்பி பார்ப்பது உண்டு.