கேப்டனான தோனி..! ருது ராஜை ஓரம் தள்ள இது தான் காரணமா..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் திடீர் மாற்றமாக ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி எல்லைக்கு அருகே ஃபீல்டிங் நிற்க, தோனி பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை அளிப்பது, ஃபீல்டிங் நிறுத்துவது என கிட்டத்தட்ட ஒரு கேப்டன் போலவே செயல்பட்டார்.
2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின், முன்னாள் கேப்டன் தோனி ஒரு மூத்த வீரராக கேப்டனுக்கு ஆலோசனை வழங்கும் நபராக மட்டுமே இதுவரை இருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முழுமையாக கேப்டன் போலவே செயல்பட்டார். ஏன் இந்த மாற்றம்..?
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகள், நான்கு தோல்விகளை சந்தித்தது.
குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஆடிய இரண்டு மேட்சிலும் தோல்வி அடைந்தது. அதன் பின் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மேட்சிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
அவர்கள் இருவருக்கும் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே முதல் பேட்டிங்கிள் களம் கிறங்கி 210 ரன்கள் எடுத்தது ஆனால் லக்னோ அணி 220 ரன்கள் எடுத்து ஜெய்துவிட்டது..,
சிஎஸ்கே தோற்க காரணம் அப்போது ஆடிய ஒரு சிலர் ஃபீல்டிங் ஒழுங்காக செய்யாதது மற்றும் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தாமல் இருந்தது மட்டுமே காரணாம் என சொல்லலாம்.., தொடர்ந்து எட்டு போட்டிகளிலும் நான்கு முறை சிஎஸ்கே படு தோல்வி அடைந்ததால் அவர்களுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியது என சொல்லலாம்.
படிப்படியாக குறைந்து ஆறில் இருந்து வெற்றி நான்காக மாறியது.., அதன் பின் சிஎஸ்கே அணி. கிரிக்கெட்டின் கோட்டை என சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.., மீதமிருந்த மூன்று போட்டிகளில் ஆடி வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டது.
லக்னோ அணிக்கு எதிராக கேப்டனாக ருதுராஜ் ஃபீல்டிங் நிறுத்துவதில் சில தவறுகளை செய்து இருந்ததால் தான் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வி அடைந்தது என்பதால் அடுத்து அதே மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஃபீல்டிங்கை முற்றிலுமாக தன் கையில் எடுத்துக் கொண்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் விலக காரணம் :
மேலும், பின் பாதியில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் வேலையைக் கூட சத்தமில்லாமல் செய்தார். அதே போல, பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுக்கு நம்பிக்கை அளித்ததோடு எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்ற ஆலோசனைகளையும் கூறினார்.
அந்த சமயத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விரலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரால் பந்து வீச முடியாது என அவர் அணியில் இருந்த விலக முடிவெடுத்தார்..
அப்போது தல தோனி கேப்டனாக ஆனார்.., ஒரு கேப்டன் எப்படி செயல்படுவாரோ அப்படி சிறப்பாக செயல்பட்டு.., டீமை முறையாக வழி நடத்தினார்..
அப்போது சிஎஸ்கே பங்கேற்ற போட்டியில் 213 ரன் வித்தியாசத்தில் எதிர் அணியைவிட 74 ரன்கள் அதிகம் எடுத்து பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் தோல்வி பயத்தில் ஊசல் ஆடிக்கொண்டிருந்த அணியை கேப்டனாக ஆன முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்ட தொடங்கினார்கள்..,
அப்போது அவர்கள் தோனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டனர். ஆனால், தோனி கிட்டத்தட்ட கேப்டன்சியை தன் வசம் வைத்துக் கொண்டது போலவே இருந்தது. சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் வரை கொண்டு சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இவ்வாறு செய்து இருக்கிறார்.
-வீரபெருமாள் வீர விநாயகம்