சிவப்பு சோள காரப் பனியாரம்…! ஈவினிங் ஸ்நாக்..!
தேவையான பொருட்கள்:
சிவப்பு சோளம் – 2 கப்
அரிசி – அரை கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுந்து – கால் கப்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – தாளிக்க
தேங்காய் – துருவல் ஒரு கப்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை:
அரிசி மற்றும் சிவப்பு சோளம் ஆகியவற்றை கழுவி ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் உளுந்து கொட்டி அதேபோல ஊற வைக்க வேண்டும்.
பின் இதனுடன் சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவில் கொஞ்சம் உப்பு சேர்த்து சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி பின் அந்த அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
குழிப்பனியாரக்கல்லை அடிப்பில் வைத்து அந்த குழியில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி வைத்து வேக வைக்க வேண்டும். பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு காரச்சட்னியுடன் வைத்து பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)