இந்தியா முழுவதும் 111 நகரங்களின் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 நகரங்கள் டாப் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
DEI என்ற அமைப்பு இந்தியா முழுவதும் பெண்கள் பாதுகாப்பாக வாழ கூடியதாகவும், பெண்கள் வாழ்வதற்கான சிறப்பான நகரங்களாகவும் 111 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. நாட்டிலேயே பெண்கள் வாழ்வதற்காக சிறந்த நகரமாக சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது அதன்படி 9வது இடத்தில் கோயம்புத்தூர் மாவட்டமும் 10 வது இடத்தில மதுரை மாவட்டமும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 10 லட்சத்துக்கும் கீழ் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் திருச்சி முதலிடத்தில் உள்ளது. மேலும், அதனை தொடர்ந்து வேலூர் ஈரோடு, சேலம், மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்தியா அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111 நகரங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 நகரங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.