அடுத்தமுறை இதை ட்ரைப் பண்ணி பாருங்க..!
தோசைக்கல்லை சூடாக்கி அதில் மோர் மற்றும் உப்பு கலந்து தடவி தேய்க்கும்போது பிசுபிசுப்பு நீங்கிவிடும். தோசை ஊற்றும்போது தோசையும் நன்றாக வரும்.
தயிர் பச்சடி நீர்த்து போய்விட்டால் கவலை வேண்டாம், அதில் சிறிது வேர்க்கடலையை வறுத்து பொடியாக்கி சேர்க்க கெட்டியாகிவிடும்.
பொன்னாங்கன்னி கீரை செய்யும்போது அதில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.
மாவு அரைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இரண்டு மூன்று வெண்டைக்காய் அரைத்து இட்லி ஊற்றினால் மென்மையாக வரும்.
ரசம் வைக்கும்போது வீட்டில் தக்காளி இல்லையென்றால் கவலை வேண்டாம் அதற்கு பதிலாக மிளகு சீரகத்துடன் சிறிது துவரம்பருப்பை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
கீரை கூட்டில் பூண்டு மற்றும் சோம்பு இடித்து சேர்த்தால் நன்றாக கூட்டு வாசனையாக இருக்கும்.
ஒரு காற்று போகாத டப்பாவில் மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு வைக்க நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
மாவில் சிறிது துவரம்பருப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து தோசை சுட்டால் தோசை நன்றாக சிவந்து வரும், மொறுமொறுவெனவும் இருக்கும்.
அசைவம் சமைத்த பாத்திரத்தில் அந்த வாசனை போக அதில் புளியை கொண்டு தேய்த்துவிட்டு பின் சோப்பால் பாத்திரத்தை கழுவினால் வாசனை போய்விடும்.
அரைத்த மாவில் ஒரு வெற்றிலை காப்ப போட்டு வைத்தால் பாத்திரத்தின் மேல் மாவு பொங்கி வராது.
சிறுதானிய பலகாரம் செய்யும்போது அதனுடன் பொட்டுக்கடலை மாவினை சிறிது சேர்த்து செய்தால் பலகாரம் சூப்பராக வரும்.