அதிஷி எழுப்பிய கேள்வி..!! அமலாக்கத்துறை பதில் என்ன..?
பணமோசடி வழக்குகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை வெளியிடுமாறு அமலாக்கத்துறைக்கு டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி,.. பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் ஆணையம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, தேர்தல் ஆணையம் பாஜக உத்தரவின் பேரில் செயல்படுவதாக தெரிவித்தார்.
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
பணமோசடி வழக்குகளில் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க மற்ற ஒன்றிய அமைப்புகளைப் போலவே பாஜகவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அவர்களைக் கைது செய்ய சிபிஐ, தற்போது தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துவாதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..