இரண்டு வீடுகளில் 23 சவரன் நகைகள் கொள்ளை-“தர்மபுரி”
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இரண்டு வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தில் செந்தாமரை, ஒரே நாளில் இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 23 சவரன் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்த 23 சவரன் தங்க நகைகளை மீட்டு ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.