இரவில் சிறை காவலர் செய்யும் அட்டூழியம்…!! சிறைவாசிகள் அவதி…!!
வாணியம்பாடியில் கிளை இரவு நேர சிறை பணியில் இருக்கும் தலைமை காவலர், மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார்.
இவர் தொடர்ந்து சிறை கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் பெறுவதாகவும், இரவில் மது அருந்திவிட்டு சிறைவாசிகளை அதிக தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.