அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு..!! பரபரப்பான ஆந்திரா..!!
தெலுங்கில் புகழ்பெற்ற நடிகரில் அல்லு அர்ஜுனும் ஒருவர்.., 2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அல்லு அர்ஜுனா., ஆனால் அவரை பலருக்கும் அப்போது தெரியவில்லை.
அதன் பின் விடாமல் முயற்சி செய்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தும் அதன் பின் டி.ஜே, வைகுண்டபுரம், ஏன் பேரு சூர்யா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் அல்லு அர்ஜுன் என்றால் பலருக்கும் நினைவில் வருவது “புஷ்பா” படம் மட்டுமே..
தெலுங்கு, சினிமாவில் முன்னணி கதா நாயகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.., இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன், திடீரென ஆந்திரா நந்தியாலா சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதனால் அப்பகுதியில் அயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.
இதையடுத்து வீட்டு பால்கனியில் நின்றபடி அல்லு அர்ஜுன் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவி ரெட்டியின் கையை உயர்த்தி காண்பித்தார்.
ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் அங்கு கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் அல்லு அர்ஜுன் தேர்தல் விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்தனர்.
இதுதொடர்பான புகாரில் ஒரே நேரத்தில் எந்த அனுமதியும் இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஷில்பா ரவி ரெட்டி ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆனாலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..