என்னடா இவனைப் போய் பிள்ளை என்கிறே…? இவன் பிராமணன் ஆயிற்றே..! பெரியவா சொன்னது..?
கடந்த சில தினங்களுக்கு முன் மன நிம்மதி வேண்டி கோவிலுக்கு சென்றேன் அப்போது எதிர் பாரத விதமாக டி.சுப்ரமணியன் அவரை சந்தித்தேன். இவர் ஆன்மீகத்தில் மிக சிறந்த பற்று உடையவர் என்றும் இவர் ஆன்மீக சிந்தனை ஆன்மீக கூற்று கொண்டவர்..
இவரின் தந்தை துரை சுவாமி அய்யர்.., மஹா பெரியவாவின் உடன் இருந்து அவரின் வார்த்தைக்களை வழி நடத்தி வருபவர்.., இவர்களை சந்தித்த போது நமக்கு ஒரு ஆன்மிக உண்மை கதை சொன்னார்.., அதை பார்ப்போமா..,
ராணிப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டில் ஏராளமான அரளிச் செடிகள்.. கூடை கூடையாக மலர்கள். கனமான மாலையாகத் தொடுத்து எடுத்துக் கொண்டு போய், மூங்கில் தட்டில் வைத்து பெரியவாளிடம் சமர்ப்பித்தோம்.
பெரியவா, அதைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மிகவும் ரசித்தார்கள். “இந்த மாலை, ரோஜா மாலையை விட உசத்தி” என்றார்.
எங்களை உற்சாகப் படுத்துவதற்காகக் கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கலாம் – என்று மௌனமாக ஏற்றுக் கொண்டோம்.
பின் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, காமாட்சி அம்மன் வீதி உலா வந்து கொண்டிருந்தார். பெரியவா உடனே எழுந்து, சாலைக்கு வந்து, காமாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, அந்த அரளி மாலையை அணிவித்தார்கள்.
ஆமாம். ரோஜா மாலையைக் காட்டிலும் அரளிமாலை அம்பாளுக்கு அழகாகவே இருந்தது. தேனம்பாக்கத்தில் பெரியவா பக்தர்கள் குழு நடுவில், நாயகனாக வீற்றிருந்தார்கள்.
நான் சென்று வந்தனம் செய்தேன். அருகிலிருந்த தொண்டர், ‘துரைஸ்வாமி பிள்ளை வந்தனம் செய்யறார்” என்று, பெரியவாள் செவியில் படும்படி கூறினார்.
குறும்பு தனமாகப் பெரியவாளிடமிருந்து பதில் வந்தது. “என்னடா, இவனைப் போய், பிள்ளை என்கிறே..? இவன் பிராமணன் ஆயிற்றே!” என சொன்னார்..
சுவைகளில் நகை போன்றது, நகைச்சுவை. பெரியவாளிடம் இந்தச் சுவை, ரத்தினக் குவியல்களாக இருக்கும்.
இதை ஏன் துரைஸ்வாமி அய்யர் நம்மிடம் சொன்னார் என்றால் மனதில் இருக்க கூடிய கவலையை நாம் தான் மனதிலே தேக்கி வைத்து கொண்டு இருக்கிறோம்.., அதை அப்டியே கால போக்கில் விட்டுவிட்டால்.., அனைத்தும் தீர்ந்து விடும்..,
-வீர பெருமாள்